சுஷாந்த்துக்கு நடந்தது எனக்கும் நடந்தது.! திரைமறைவு விஷயத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பிரபல நடிகை!
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகையான வித்யா பிரதீப் காரணமே இன்றி 6 படங்களின் வாய்ப்பை இழந்ததாக கூறியுள்ளார்.
சின்னத்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் ஒருபோதும் வெள்ளித்திரையில் மிளிர முடியாது என்பதை ஒரு சிலர் மாற்றி காண்பித்துள்ளனர். சிவகார்த்திகேயன், சந்தானம், ப்ரியா பவானி ஷங்கர், வாணி போஜன் ஆகியோர் வரிசையில் புதிதாக இணைந்துள்ளவர் நடிகை வித்யா பிரதீப்.
கேரளாவைச் சேர்ந்த வித்யா பிரதீப் பயோ டெக்னாலஜி படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர்.
மருத்துவ துறையில் நல்ல அங்கீகாரத்தை பெற்றுள்ள வித்யா, ஆரம்பத்தில் இருந்தே மாடலிங் துறையிலும் சாதித்து வருகிறார்.
சினிமாவில் நடிக்க தொடங்கிய வித்யா, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான "சைவம்" படத்தில் பேபி சாராவின் அம்மாவாக நடித்தார். அதன் பின்னர் பல படங்களில் நடித்திருந்தாலும் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த தடம் படத்திலும் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
தற்போது சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் நாயகி சீரியலில் நடித்து வருகிறார். குடும்ப தலைவியாக செம்ம கெத்தாக நடித்து வரும் வித்யா, மாடலிங் துறையில் பிசியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இவர் தடம் படம் தனக்கு சிறந்த அங்கீகாரத்தை கொடுத்து என்றும், இந்த படத்திற்கு முன்... காரணமே இன்றி 6 படங்களின் வாய்ப்புகளை இழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு நிலையில் திரைப்பட துறையில் இருந்தே ஒதுங்கி, பிடிப்பின் மீது கவனம் செலுத்தியுள்ளார். பின்னர் சில இயக்குனர்கள் கொடுத்த நம்பிக்கையில் தான் மீண்டும் நடிக்க வந்தேன் என கூறியுள்ளார்.
சுஷாந்த் சிங் மரணத்திற்கு பின், பல நடிகர் நடிகைகள் தங்களுக்கு எதிராக திரையுலகில் செயல்படுபவர்கள் மற்றும் பட வாய்ப்புகள் இழந்தது குறித்து தெரிவித்து வரும் நிலையில் நடிகை வித்யா பிரதீபுக்கு இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.