இந்த சப்பை காரணத்துக்காக டாக்டருக்கு படிக்க வைக்காத தந்தை! சரண்யா பொன்வண்ணன் பற்றிய அரிய தகவல்கள் இதோ!
நடிகை சரண்யா பொன்வண்ணன் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய, 'நாயகன்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் என்பது பலருக்கும் தெரியும் ஆனால், அவருடைய வீட்டில் சண்டை போட்டு எப்படி இந்த படத்திற்கு நடிக்க வந்தார் என, பலருக்கு தெரியாத தகவல்கள் இதோ..
நடிகை சரண்யா பொன்வண்ணன் தந்தை ஒரு இயக்குனர் அவர் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் கிட்ட தட்ட 75 படங்களை இயக்குள்ளார் என்பது பலருக்கும் தெரிந்த தகவல்தான்.
இவர் இயக்குனராக இருந்த போதும், சினிமா மீதான ஆசை சரண்யாவிற்கு வர கூடாது என்பதில் திட்டவட்டமாக இருந்தார்.
இதனால் லிப்ஸ்டிக் பயன்படுத்த கூடாது, ஐ லைனர் பயன்படுத்த கூடாது, இப்படித்தான் இருக்க வேண்டும் என பல நிபந்தனைகளும் இருந்தது.
இந்த நிலையில் தான் தன்னுடைய பள்ளி படிப்பை முடித்தார் சரண்யா.
எதிர்பாராத விதமாக டாக்டருக்கு படிக்க ஆசை பட்ட இவருக்கு, வெளி ஊரில் டாக்டர் சீட் கிடைத்தது.
ஆனால் இவருடைய தந்தை, சென்னையில் இருந்து வேறு ஊருக்கு சென்று படிக்க வேண்டும் என்கிற சப்பை காரணத்திற்காக தன்னை மெடிக்கல் படிக்க விடவில்லை என தெரிவித்துள்ளார்.
பின்னர் wbc கல்லூரியில் nutrition food safety சம்மந்தாமாக படிப்பை தேர்வு செய்து படித்ததாக கூறியுள்ளார்.
மேலும் நாயகன் பட வாய்ப்பு குறித்து கூறுகையில், தன்னுடைய தந்தையின் நண்பர் ஒருவர் வார இதழ் ஒன்றுக்கு சுத்தமாக மேக்அப் இல்லாமல் சில புகைப்படங்களை தந்தையின் அனுமதியோடு எடுத்தார்.
இந்த புகைப்படம் எப்படியோ மணிரத்னத்தின் கண்ணில் பட, நாயகன் பட வாய்ப்பு கிடைத்தது. ஒரு நிலையில் இந்த படத்தில் அடம் பிடித்து நடித்ததாக தெரிவித்துள்ளார்.
பின்னர் இந்த படத்திற்கு கிடைத்த அங்கீகாரம் தன்னை முழு நேர நடிகையாக மாற்றியதாகவும்.. ஆரம்பத்தில் குழப்பத்துடன் நடிக்க ஒப்புக்கொண்டாலும், தந்தையே பாராட்டும் அளவிற்கு நடித்தது மறக்க முடியாதது என தன்னை பற்றிய அரிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார் சரண்யா பொன்வண்ணன்.