நயன்தாராவை பார்த்து பொறாமையில் பொசுங்கும் சமந்தா? கோடிகளை ஏற்றி தயாரிப்பாளரை கிறுகிறுக்க வைக்கிறாராம்!
நயன்தாரா கோடிகளில் வாங்கும் சம்பளத்தை பார்த்து, நடிகை சமந்தா பொறாமையில் பொசுங்கி வருவதாக தெலுங்கு திரைப்பட வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.
தமிழில் நிலையான இடத்தை பிடித்து விட்டாலும், நயன்தாரா, சமந்தா, திரிஷா போன்ற நடிகைகள், தமிழ் படங்களை விட தெலுங்கு படங்களில் சம்பளம் கூடுதலாகவே வாங்கி வருகிறார்கள்.
அந்த வகையில், தமிழில் 3 முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்கும் நயன்தாரா தெலுங்கு திரையுலகில் 6 கோடி சம்பளம் அசால்டாக வாங்குகிறாராம்.
இது தான் பல முன்னணி நடிகைகளுக்கு பொறாமையை தூண்டி விடுகிறது.
குறிப்பாக நயன்தாராவிற்கு சமந்தா என்னதான் தோழியாக இருந்தாலும், தொழில் ரீதியாக அவர் மீது பொறாமையில் தான் உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது பிரபல தெலுங்கு பட அதிபர் ஒருவர், சமந்தாவை சந்தித்து, தன்னுடைய படத்தில் நடிக்க கால் சீட் கேட்டுள்ளார்.
இதற்கு சமந்தா, 3 :5 கோடியில் பேச துவங்கி 3 கோடி வரை குறைத்தும், அந்த தயாரிப்பாளர் சமந்தாவின் சம்பளத்தில் பிடி கொடுத்து பேசவில்லையாம்.
இதனால் கடுப்பான சமந்தா, நயன்தாராவுக்கு 6 கோடி சம்பளம் தரும் போது, தனக்கு 3 கோடி கூட தரக்கூடாது என, நச் கேள்வி கேட்டுள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத அந்த தயாரிப்பாளர், எதுவுமே பேச முடியாமல் அந்த இடத்தை விட்டு காலி செய்ததாக பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.