ஒடிசா ஆபாச நடிகையால் திக்குமுக்காடும் சோசியல் மீடியா... சர்ச்சை இயக்குநரின் அடுத்த இறக்குமதி...!
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் ராம்கோபால் வர்மா அரசியல், சினிமா, நாட்டு நடப்பு என எதையும் விட்டு வைக்காமல் சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். ஒரே ஒரு ட்விட்டர் அக்கவுண்டை வைத்துக்கொண்டு இவர் கிளப்பி விடும் பிரச்சனைகளுக்கு அளவில்லை. இப்போது சோசியல் மீடியாவின் ஹாட் டாப்பிக்கே ராம் கோபால் வர்மாவின் அடுத்த பட ஹீரோயின் பற்றி தான். யார் அவர் என பார்க்கலாம் வாங்க..
சமீபத்தில் ஆபாச பட நடிகை மியா மல்கோவை வைத்து கிளைமேக்ஸ் என்ற படத்தை இயக்கிய ராம்கோபால் வர்மா, அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டார்.
திரில்லர் என்ற படத்திற்கு திட்டம் போட்டுள்ள ராம்கோபால் வர்மா, க்ளைமேக்ஸ், நேக்டு பட ஹீரோயின்களையே பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு அப்சரா ராணி என்ற நடிகையை அறிமுகப்படுத்தி உள்ளார்.
அப்சரா ராணி ஒடிசாவை சேர்ந்தவர் என்றாலும் வளர்ந்தது எல்லாம் டேராடூனில், தற்போது டோலிவுட் வாலாக்களை அசத்து பார்ப்பதற்காக இந்த கவர்ச்சி புயல் ஐதராபாத்தில் மையம் கொண்டுள்ளாது
ஒடிசாவைச் சேர்ந்த இந்த கவர்ச்சி கன்னிக்கு நடனம் சூப்பராக வருமாம், அதை விட நடிப்பில் பின்னுவார் என ராம் கோபால் வர்மா சர்டிபிகேட் கொடுத்துள்ளார்.
அடுத்த ட்வீட்டில் அப்சராவை சந்திக்கும் முன்பு, 1999ம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளிக்கு பிறகு ஒடிசாவை பற்றி கேள்விப்படவே இல்லை. இப்போது வரை சந்தித்த பிறகு ஒடிசா அனைத்து வகையான சூறாவளிகளையும் உருவாக்குகிறது என்பதை உணர்ந்தேன் என அவருடைய அழகை வர்ணித்துள்ளார்.
அப்சரா ராணி ஓடிசா ஆபாச படங்களில் நடித்து வந்த நடிகையாம். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் என்ன ஆச்சு ராம் கோபால் வர்மாவிற்கு இப்படி அடுத்தடுத்து ஆபாச நடிகைகளை சினிமாவில் அறிமுகம் செய்கிறாரே என விமர்சித்து வருகின்றனர்.
இப்படி ஆபாச நடிகைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் தனது படத்திற்கு ப்ரீ பப்ளிசிட்டி தேடிக்கொள்கிறார்
மியா கலிஃபா, சன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு கவர்ச்சி காட்டும் அப்சரா சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவாரா? என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.