MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரகுவரனின் மரணத்திற்கு பின்னணியில் இப்படி ஒரு சோகமா? சகோதரர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ரகுவரனின் மரணத்திற்கு பின்னணியில் இப்படி ஒரு சோகமா? சகோதரர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ரகுவரனின் மரணத்திற்கு பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி தகவலை அவரது சகோதரர் ரமேஷ்வரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

2 Min read
Ganesh A
Published : Aug 09 2023, 02:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

90-களில் வில்லன் என்றாலே அனைத்து இயக்குனர்களுக்கு முதலில் மனதில் வந்து நிற்பவர் ரகுவரன். அவரின் குரல் மற்றும் உடல்மொழி ஆகியவை அக்மார்க் வில்லனாக ரகுவரனை அடையாளப்படுத்தியது. இவரைவிட யாரும் சிறந்த வில்லனாக இருக்க முடியாது என சொல்லும் அளவுக்கு பாட்ஷா, முதல்வன் போன்ற படங்களில் ரகுவரனின் நடிப்பு இருக்கும். இப்படிப்பட்ட மகாநடிகன், 49 வயதிலேயே இயற்கை எய்திவிட்டார். அவர் மரணமடைந்து 15 ஆண்டுகள் ஆனால் இன்றளவும் அவரின் இடத்தை எந்த நடிகராலும் பிடிக்க முடியவில்லை.

24

இந்நிலையில், நடிகர் ரகுவரனின் மறைவு குறித்தும் கடைசி காலகட்டத்தில் அவர் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்தும் அவரது சகோதரர் ரமேஷ்வரன் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அவர் தெரிவித்துள்ளதாவது : “யாரடி நீ மோகினி தான் அண்ணனின் கடைசி படம். அதில் நடிக்க இயக்குனர் ரகுவரனை அணுகியபோது, கதை கேட்டு, தனுஷின் கேரக்டர் தனது மகன் ரிஷியை நினைவு படுத்தும் வகையில் உள்ளதால் உடனடியாக நடிக்க சம்மதித்துவிட்டார்.

இதையும் படியுங்கள்... பீஸ்ட்டில் சொதப்பினாலும்... ஜெயிலர் படத்திற்காக நெல்சனுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் - அதுவும் இத்தனை கோடியா?

34

எதிர்பார்த்தபடியே யாரடி நீ மோகினி படமும் மாபெரும் வெற்றி பெற்றது. வழக்கமாக வில்லன் கேரக்டரில் நடிக்கும் ரகுவரன், அதில் பாசமிகு தந்தையாக நடித்திருந்ததால் அவரது கேரக்டரும் மக்கள் மனதில் இடம்பிடித்தது. இப்படத்தின் டப்பிங் முடித்ததுமே மிகவும் மன சோர்வுடன் காணப்பட்டார் ரகுவரன். யாருடனும் பேசாமல் அமைதியாகவே இருந்தார். அந்த மன அழுத்தமும் அவரது இறப்பிற்கு முக்கிய காரணம் என அவரது சகோதரர் கூறி இருக்கிறார்.

44

நடிகர் ரகுவரன் யாரடி நீ மோகினி திரைப்படம் ரிலீஸ் ஆகும் முன்பே இறந்துவிட்டார். அதிகளவு குடிப்பழக்கம் இருந்ததால் அவர் மரணமடைந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரது மரணத்திற்கு மன அழுத்தம் தான் காரணம் என அவரது சகோதரர் கூறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் ரகுவரன் நடிகை ரோகினியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சாய் ரிஷிவரன் என்கிற மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... பிரகாஷ் ராஜ் நின்ற இடத்தை கோமியம் ஊற்றி கழுவிய மாணவர்கள் - பரபரப்பை கிளப்பிய வீடியோ இதோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved