நானே வருவேன் படத்தை புறக்கணிக்கிறாரா தனுஷ்?... புரமோஷனுக்கு வராதது ஏன்? - தாணு கொடுத்த ‘நச்’ விளக்கம்
Naane varuven : நானே வருவேன் படத்தின் புரமோஷன் மிகவும் மந்தமான நிலையில் நடைபெற்று வரும் நிலையில், அதுகுறித்து தயாரிப்பாளர் தாணு விளக்கம் அளித்துள்ளார்.
தனுஷை வைத்து அசுரன், கர்ணன் போன்ற பிளாக்பஸ்டர் படங்களை தயாரித்தவர் கலைப்புலி எஸ் தாணு. அவர் தயாரிப்பில் அடுத்ததாக தனுஷ் நடித்துள்ள படம் நானே வருவேன். இப்படத்தை தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கி உள்ளார். இதில் ஹீரோவாக நடித்துள்ளதோடு, இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதையும் எழுதி உள்ளார் தனுஷ்.
இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக இந்துஜாவும், ஸ்வீடன் நாட்டு நடிகை எல்விரமும் நடித்துள்ளனர். அதேபோல் இயக்குனர் செல்வராகவனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நானே வருவேன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 29-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. மணிரத்னம் இயக்கிய பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக இப்படம் ரிலீசாக உள்ளது. ஒருபக்கம் பொன்னியின் செல்வன் படக்குழு இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு, படத்தை பிரம்மாண்டமாக புரமோட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்.... கோபியின் திருமணம்..பாக்கியாவின் என்ட்ரி ..திக் திக் நிமிடங்கள் : இன்றைய எபிசோட்
ஆனால் நானே வருவேன் படத்தின் புரமோஷன் மிகவும் மந்தமான நிலையில் தான் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இப்படத்தின் நாயகனான தனுஷும், இயக்குனர் செல்வராகவனும் இப்படம் குறித்து எந்தவித பேட்டியும் அளிக்காமல் உள்ளனர். இதனால் தனுஷ் இப்படத்தை புறக்கணிக்கிறாரா என்கிற கேள்வியும் நெட்டிசன்கள் மத்தியில் எழ தொடங்கியது.
இந்நிலையில், நானே வருவேன் படத்தை புரமோட் செய்யும் வகையில் தயாரிப்பாளர் தாணு பேட்டி கொடுத்து வருகிறார். அந்தவகையில் பிரபல தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் பேட்டி அளித்த போது தொகுப்பாளர், தனுஷும் செல்வராகவனும் புரமோஷனுக்கு வராதது குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் சற்று கோபமான தயாரிப்பாளர் தாணு, இதே கேள்வியை அஜித், விஜய்யிடம் நீ கேட்க முடியுமா என தொகுப்பாளரை பார்த்து கேட்டார்.
மேலும், இன்னைக்கு தனுஷ் வரணும்னு நினைச்சா தாராளமா வந்திருக்கலாம். ஆனா இதனை ஒரு சர்ச்சை ஆக்க வேண்டாம். இப்படிலாம் இல்லாமல் கூட நம்மால் வர முடியும், தமிழ்நாடு முழுக்க போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்துகொண்டு தான் இருக்கிறோம்.
இதையும் படியுங்கள்.... கூல் சுரேஷ் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றார் ஐசரி கணேஷ்.. இதுதான் மிகப்பெரிய பரிசு என கண்கலங்கிய கூல் சுரேஷ்