சித்ரா தற்கொலைக்கு முன்பு கடைசியாக போனில் பேசியது இவருடன் தான்... போலீஸ் விசாரணையில் வெளியான பகீர் தகவல்...!
First Published Dec 11, 2020, 1:41 PM IST
இந்நிலையில் சித்ராவின் செல்போனைக் கைப்பற்றி ஆய்வு நடத்திய போலீசாருக்கு பல திடுக்கிடும் விஷயங்கள் சிக்கியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள், சந்தேகங்கள் எழுந்தன. இதையடுத்து போலீசார் சித்ராவின் கணவர் ஹேமந்த், உறவினர்கள், நண்பர்கள், சக நடிகர், நடிகைகளிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்ராவை ஹேமந்த் தான் அடித்து கொன்றுவிட்டதாக அவருடைய தாயார் குற்றச்சாட்டி வந்த நிலையில், நேற்று வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என்பது உறுதியானது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?