சித்ரா தற்கொலைக்கு முன்பு கடைசியாக போனில் பேசியது இவருடன் தான்... போலீஸ் விசாரணையில் வெளியான பகீர் தகவல்...!
இந்நிலையில் சித்ராவின் செல்போனைக் கைப்பற்றி ஆய்வு நடத்திய போலீசாருக்கு பல திடுக்கிடும் விஷயங்கள் சிக்கியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள், சந்தேகங்கள் எழுந்தன. இதையடுத்து போலீசார் சித்ராவின் கணவர் ஹேமந்த், உறவினர்கள், நண்பர்கள், சக நடிகர், நடிகைகளிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்ராவை ஹேமந்த் தான் அடித்து கொன்றுவிட்டதாக அவருடைய தாயார் குற்றச்சாட்டி வந்த நிலையில், நேற்று வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என்பது உறுதியானது.
இதையடுத்து சித்ராவின் மரண வழக்கை தற்கொலை வழக்காக பதிவு செய்துள்ள போலீசார். அவரை தற்கொலைக்கு தூண்டியது யார்? தற்கொலைக்கான காரணம் என்ன? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
இந்த விசாரணையில் ஹேமந்த் ஏற்கனவே குடித்துவிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சித்ராவுடன் சண்டையிட்டதும், அவருக்கும் சித்ராவின் தாயாருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது போன்ற பல்வேறு விஷயங்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சித்ராவின் செல்போனைக் கைப்பற்றி ஆய்வு நடத்திய போலீசாருக்கு பல திடுக்கிடும் விஷயங்கள் சிக்கியுள்ளது. அதாவது சித்ராவின் வாட்ஸ் அப் மெசெஜ்களில் பல டெலிட் செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி சித்ரா தற்கொலைக்கு முன்னதாக கடைசியா செல்போனில் அவருடைய அம்மாவுடன் பேசியிருக்கிறார். அப்போது சித்ராவின் தாயார் விஜயா, ஹேமந்தை விட்டு பிரிந்து வந்துவிடும் படி அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஹேமந்தும், சித்துவின் அம்மா விஜயாவும் கொடுத்த மன உளைச்சலே அவருடைய தற்கொலைக்கு காரணம் என போலீசார் ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.