இந்தியாவின் High Paid வில்லன் இவர் தான்! ஆனால் அவர் விஜய் சேதுபதி அல்ல - மாஸ் காட்டும் "நாயகன்"!
ஜவான் படத்தில் நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சுமார் 21 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்திய சினிமா வரலாற்றில் அம்ரிஷ் பூரி துவங்கி ரகுவரன், பிரகாஷ்ராஜ், என்று பட்டியல் நீண்டு தற்பொழுது விஜய் சேதுபதி வரை பல சூப்பர் ஹிட் வில்லன்கள், தங்கள் அசாத்திய நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்த வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் ஆரம்ப காலகட்டத்தில் வில்லனாக தனது திரை பயணத்தை ஆரம்பித்து இன்று ஸ்டைலின் மன்னனாக, சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் ஒருவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
யோகி பாபுவை கலாய்த்த தல தோனி.. 'LGM' படத்தின் விழாவில் நடந்த சம்பவம்.. க்யூட் வீடியோ..
இன்றளவும் பல நடிகர்கள் தங்கள் வில்லத்தமான நடிப்புக்காக பெரும் பாராட்டுகளை பெற்று வருகின்றனர். ஆனால் தற்பொழுது வெளியாகி உள்ள ஒரு தகவலின்படி, தற்போதைக்கு இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் ஒரு வில்லனாக தனித்து காணப்படுகிறாராம் ஒரு நடிகர். அதுவும் அந்த நடிகர் இயல்பாக பெரிய அளவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததில்லை.
அவரும் ஒரு சில படங்களில் Anti Heroவாக நடித்துள்ளார் என்றபோது பெரிய அளவில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடிக்காத ஒருவர் தான் இன்று இந்தியாவின் high paid வில்லனாக மாறியுள்ளார். அவர் வேறு யாரும் அல்ல, உலக நாயகன் கமல்ஹாசன் தான்.
நாக் அஸ்வின் இயக்கத்தில், வைஜயந்தி மோவிஸ் வழங்கும் ப்ராஜெக்ட் கே படத்தில் பல ஆண்டுகள் கழித்து ஒரு ஹை டெக் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்துவருகிறார் கமல்ஹாசன். இந்த படத்திற்காக அவர் 25 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. அதேபோல இறுதியாக ஜவான் படத்தில் நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சுமார் 21 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாகவும் கூறப்படுகிறது.
ஆதிபுருஷ் படத்தில் நடித்த சைப் அலி கான் சுமார் 10 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் இந்தியாவின் தற்போதைய பிக் பட்ஜெட் வில்லனாக மாறியுள்ளார் நாயகன் கமல்ஹாசன். ப்ராஜெக்ட் கே பட பணிகளை முடித்தபிறகு ஹ. வினோத் படத்தில் நடிக்கவுள்ளார் அவர். அந்த படம் முடிந்த பிறகு தனது 234வது படமாக சுமார் 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் கமல்.
'மாமன்னன்' படத்தில் வடிவேலு நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?