பெரியவீட்டு பொண்ணு நிஹாரிகாவின் ப்ரீ வெட்டிங் போட்டோஸ்..! களைகட்டிய கொண்டாட்டம்..!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் கலைக் குடும்பத்திற்கு என்று தனி பெருமையும், ரசிகர்கள் பட்டாளமும் உண்டு. அவர்கள் குடும்பத்தில் நடக்கும் சிறிய விஷேசங்கள் கூட ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும். தற்போது சிரஞ்சீவியின் தம்பியான நாகபாபுவின் மகள் நிஹாரிகா இன்று உதய்பூரில் திருமணம் நடந்து முடிந்தது.
இந்நிலையில் நேற்று இரவு... நிஹாரிகாவிற்கு நடந்த மெஹந்தி கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் இளம் நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த நிஹாரிகா, தமிழில் கூட விஜய் சேதுபதி உடன் “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” படத்தில் நடித்து பிரபலமானவர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நிஹாரிகாவிற்கும், குண்டூர் ஐஜி-யின்
மகனான இன்ஜினியர் சைதன்யாவிற்கும் ஐதராபாத்தில் உள்ள
நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
நிஹாரிகா - சைதன்யா திருமணம் இன்று
உதய்பூரில் உள்ள ஆடம்பரமான ஓபராய் உடை விலாஸ் அரண்மனையில் நடைபெற உள்ளது.
மிக பிரம்மாண்டமாக
நடக்கும் திருமண ஏற்படுகள் அனைத்தையும் நிஹாரிகாவின்
சகோதரர் வருண் தேஜ் தான் கவனித்து வருகிறார்.
திருமணத்தில் பங்கேற்பதற்காக ஒட்டுமொத்த குடும்பத்தினரும்
தனி விமானம் மூலம் உதய்பூர் கிளம்பி சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு நிஹாரிகாவின் மெஹந்தி நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடந்தது.
இதில் சிரஞ்சிவி, அவரது மகன் ராமச்சரன், பவன் கல்யாண், என பெரிய குடும்பத்தை சேர்ந்த அனைவருமே கலந்து கொண்டனர்.
இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பவன் கல்யாண் மணமக்களை வாழ்த்திய காட்சி
திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள்
களைகட்டிய கொண்டாட்டம்
மெஹந்தி போட்டு கொள்ளும் நிஹாரிகா
தங்கையுடன் நின்று கொண்டிருக்கும் ராம் சரண்
பெரிய வீட்டு திருமணத்தில் தெலுங்கு திரையுலகமே செம்ம பிஸி