“த்ரிஷா மேல சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்”... மிரட்டல் விடுத்த மீரா மிதுனை வச்சி செய்யும் நெட்டிசன்கள்...!
பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் இன்று வரை சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லாதவர் மீரா மிதுன். கொஞ்ச நாளைக்கு முன்பு தான் தலைவி படத்தில் நடித்த கங்கனா ரனாவத்தை தரக்குறைவாக விமர்சித்து ரசிகர்களிடம் வாங்கிக்கொண்டார். இப்போது மீண்டும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷாவை எச்சரிப்பது போல் ட்வீட் செய்து நெட்டிசன்களிடம் மாட்டிக்கொண்டார்.
மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்த மீரா மிதுன், தனது சினிமா ஆசையை நிறைவேற்றி கொள்வதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் காலடி எடுத்துவைத்தார். அங்கு முதல் நாளில் இருந்தே மீரா மிதுனை பிரச்சனைகள் சூழ்ந்து கொண்டன.
அதுபோதாது என்று தேவையில்லாமல் சேரன் மீது பொய் புகார் கூறி, சேற்றை வாரிப்பூசிக்கொண்டார். இதனால் பார்வையாளர்களின் கோபத்திற்கு ஆளான மீரா மிதுன், அந்த நிகழ்ச்சியில் தோற்று வெளியேறினார்.
அதன் பின்னர் அனைத்து பட வாய்ப்புகளும் கைவிட்டு போக, எப்படியாவது ஹீரோயினாக நடித்தே தீருவேன் என்று அரைகுறை ஆடையில் கண்கூசும் படியான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அதை பார்த்து நெட்டிசன்கள் கடுப்பாகி கழுவி ஊத்தினாலும் கண்டுகொள்வதே இல்லை.
டூப்பீஸ், கர்சீப் சைஸ் டிரஸ், முன்னழகு மொத்தமும் தெரிய முரட்டு போஸ் என இனி காட்ட ஒன்றுமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லாத்தையும் காட்டிவிட்டார். மீரா மிதுன் பதிவிடும் போட்டோக்களையும், வீடியோக்களையும் பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள், அவரை பங்கமாக கலாய்த்தும், கழுவி ஊற்றியும் வருகின்றனர்.
அப்படி பங்கமாக அவர் எடுக்கும் போட்டோ ஷூட்களை வேறு பாலிவுட் நடிகைகள் முதல் நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வரை பலரும் காப்பியடிப்பதாக கூறி காமெடி செய்து கொண்டிருந்தார்.
இடையே கருத்து சொல்கிறேன் என வந்து அவரே புண்ணாக்கி கொள்கிறார். அப்படி தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரனாவத்திற்கு தகுதியில்லை என ட்விட்டரில் கொளுத்தி போட்டார். இதனால் கொதித்து போன ரசிகர்கள் கங்கனாவை பற்றி பேச உனக்கு என்ன தகுதியிருக்கு என சகட்டுமேனிக்கு திட்டி தீர்த்தனர்.
அப்படியாவது கொஞ்ச நாளைக்கு அமைதியாக இருப்பார் என பார்த்தால் மீண்டும் தனது பப்ளிசிட்டிக்கான வேலையை ஆரம்பித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா ரசிகர்களிடம் படாதபாடு பட்டு வருகிறார்.
20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் நடிகை த்ரிஷா, எந்த காரணத்தையும் சொல்லாமல் சிறிது காலம் சோசியல் மீடியாவை விட்டு விலகி இருக்க போவதாக அறிவித்தார்.
கடந்த ஒரு மாதமாக சோசியல் மீடியா பக்கமே வராமல் இருந்த த்ரிஷா நேற்று அசத்தலான செல்ஃபி ஒன்றை பதிவிட்டு தனது ரசிகர்களுக்காக ட்விட்டரில் கம்பேக் கொடுத்தார்.
ஒரு ஜிம் உடையில் அவர் மார்பில் குத்தி உள்ள நீமோ டாட்டு தெரியும் அளவிற்கு அவர் அந்த போட்டோவை எடுத்து உள்ளார். அந்த போட்டோவும் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.
இந்நிலையில் இந்த புகைப்படம் தன்னுடைய தோற்றத்தை காபி அடித்தது போல இருப்பதாக நடிகை மீரா மிதுன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், த்ரிஷா இது உங்களுக்கான கடைசி வார்னிங். அடுத்தமுறை நீங்கள் இதே மாதிரி உங்களுடைய போட்டோவை என்னைப் போலவே இருப்பதற்காக போட்டோ ஷாப் செய்து நீண்ட முடி உள்ளிட்டவற்றை மார்பிங் செய்து வெளியிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியும். உங்கள் மனசாட்சிக்கு தெரியும் என நினைக்கிறேன். வளருங்கள். உங்களுக்கு என்று ஒரு வாழ்க்கையை தேடி கொள்ளுங்கள்" என பதிவிட்டுள்ளார்.
இதனால் செம்ம கடுப்பான த்ரிஷா ரசிகர்கள் மீரா மிதுனை கண்டபடி கழுவுற்றி வருகின்றனர். மீரா மிதுனுக்கு ஏதோ பைத்தியம் பிடித்துவிட்டது போல் விதவிதமான மீம்ஸ்களையும், கமெண்ட்களையும் போட்டு அவருடைய இந்த பதிவை ட்ரால் செய்து வருகின்றனர்.
உன்ன போய் அவங்க கூட கம்பேர் பண்றீயா? அவங்க சினிமாவில் நடிக்கிறதுல பிசியா இருக்காங்க, நீ யாருன்னே தெரியாது என கண்டபடி பேசி வருகின்றனர்.