“அப்பாவுக்கும் - புருஷனுக்கும் வித்தியாசமிருக்கு”... வனிதாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...!
இதனால் கடுப்பான நெட்டிசன்கள் பலரும் ஏன் நா.முத்துக்குமாரின் அழகிய வரிகளை இப்படி கேவலப்படுத்துறீங்க என கொதித்தெழுந்துள்ளனர்.
சோசியல் மீடியா பக்கம் போனாலே வனிதா - பீட்டர் பால் கல்யாண பஞ்சாயத்து தான் நிரம்பி வழிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான வனிதா, விஷ்வல் எடிட்டர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொன்டார்.
கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே கிறிஸ்துவ முறைப்படி இருவரும் மோதிரம் மாத்தி திருமண பந்தத்தில் இணைந்தனர். அந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வெளியாகி தாறுமாறு வைரலானது.
திருமணமான அடுத்த நாளே பீட்டர் பால் முதல் மனைவியை முறையாக விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்ட விவகாரம் வெளிவந்தது.
இதையடுத்து ஆன்லைன் மீடியாக்களில் பேட்டி கொடுத்துள்ள பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், முறையாக விவகாரத்து பெறாமல் தன்னையும், தனது பிள்ளைகளையும் தவிக்கவிட்டு பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக அவருடைய முதல் மனைவி எலிசபெத் ஹெலன் புகார் அளித்துள்ளார்.
அதுமட்டுமின்றி பீட்டர் பால் ஒரு குடிகாரர், பெண்கள் பின்னால் சுற்றுபவர் என்பது போல் எல்லாம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்த வனிதா சட்டப்படி எதையும் சந்திக்க தயார் என கூறியதோடு பீட்டர் பாலுக்கு ஆதரவாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்
இதனிடையே திருமணத்தின் போது வனிதாவின் உதட்டில் பீட்டர் பால் முத்தமிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பெண் குழந்தைகள் முன்னால் இப்படி தான் நடந்து கொள்வீர்களா? என பலரும் வனிதாவை வறுத்தெடுத்தனர்.
லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி என திரைப்பிரபலங்கள் கூட அட்வைஸ் செய்து வனிதாவிடம் வாங்கி கட்டிக்கொண்டனர். வனிதா கொடுத்த பதிலடியை தாங்க முடியாமல் மன்னிப்பு கேட்டது எல்லாம் தனிக்கதை.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கணவர் பீட்டர் பால் தனது நெற்றியில் முத்தமிடும் போட்டோவை இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கத்தில் வனிதா பகிர்ந்திருந்தார்.
அந்த போட்டோவுடன் இயக்குநர் ராமின் தங்க மீன்கள் படத்தில் வரும், “மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும்... முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று”... குறிப்பிட்டுள்ளார்.
இதனால் கடுப்பான நெட்டிசன்கள் பலரும் ஏன் நா.முத்துக்குமாரின் அழகிய வரிகளை இப்படி கேவலப்படுத்துறீங்க என கொதித்தெழுந்துள்ளனர். நீங்கள் பெற்றோட பெண்ணும் இல்லை, அவர் உங்களுடைய அப்பாவும் இல்லை. அப்ப ஏன் உண்மையான அப்பா-மகள் உறவை கேவலப்படுத்துகிறீர்கள்? என சிலர் கடுப்பாக பதிவிட்டுள்ளனர்.