முன்னாள் காதலர் பிரபுதேவாவுடன் நயன்தாரா...? வாய்திறப்பாரா விக்னேஷ் சிவன்!
கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, பற்றி... பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர், யூடியூப் மூலம் , கொளுத்தி போட்டுள்ள ஒரு தகவல் கோடம்பாக்கத்தில், காட்டு தீ போல் எரிந்து வருகிறது.
நடிகை நயன்தாரா, தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர் சிம்பு, பிரபு தேவா என சிலரை காதலித்து, பின் அவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தது அனைவருமே அறிந்தது தான். சிம்புவை காதலித்ததற்கு ஆதாரமாக, இருவரும் காதல் மயக்கத்தில் கொஞ்சி விளையாடிய புகைப்படைகள் வெளியாகியது.
அதே போல் பிரபுதேவா மேல் உள்ள காதலை ஊருக்கே... தெரிவிக்க இருவரும் ஒன்றாக வலம் வந்த பல புகைப்படங்கள் மற்றும், இருவரும் பல திரைப்பட விருது விழாக்களிலும் கலந்து கொண்டார்.
திரைப்பட விழா ஒன்றில் இருவரும் சேர்ந்து வந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது
பிரபு தேவா மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த நயன்தாரா, அவருடைய பெயரை தன்னுடைய கையில் பச்சை கூட குத்தி கொண்டார்.
ஒருமுறை நடன புயலுடன் கொஞ்சி குலாவி... மேடையில் செம்ம ஆட்டம் போட்டபோது எடுக்கப்படும் புகைப்படம் இது
நயன்தாராவை திரைப்பட விழாக்களுக்கு மட்டும் இன்றி, சில திருமணங்களுக்கும் பிரபுதேவா அழைத்து சென்று தங்களுடைய காதலை வெளிப்படுத்தினார்.
மேலும், இருவரும் பிரபு தேவாவிற்காக மதம் மாறி, இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் சில தகவல்கள் வெளிவந்தது.
உயிருக்கு உயிராக இருவரும் காதலித்த நிலையில் யார் கண் பட்டதோ... திடீர் என தங்களுக்குள் பிரேக் அப் ஆனதாக அறிவித்து, ஒட்டு மொத்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்தனர் இவர்கள்.
தன்னுடைய பழைய காதல் நினைவுகள் அனைத்திலும் இருந்து மீண்டு, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கடந்த 5 வருடத்திற்கு மேலாக நல்ல புரிதலுடன் கூடிய காதல் வாழ்க்கையில் இருக்கிறார் நயன். இந்த வருடம் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில்... ரசிகர்களின் ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் தான் ஒரு பத்திரிக்கையாளர் நயன்தாரா மீண்டும் பிரபு தேவா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக எந்த ஒரு ஆதாரமும் இல்லாத தகவலை வெளியிட்டுள்ளார். எனவே நயன் இந்த விஷயத்திற்கு வாய் திறக்க விட்டாலும், அவருடைய காதலராவது இது குறித்து அதிரடி கருத்து கூற வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.