5 வருட காதலுக்கு முற்று புள்ளி வைக்கிறாரா நயன்தாரா..? தீயாய் பரவும் ரகசிய தகவல்..!
இந்த வருடம், அடுத்த வருடம் என நீண்டு கொண்டே செல்லும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் குறித்து தற்போது சமூக வலைத்தளத்தில் புதிய தகவல் ஒன்று வைரலாக பரவி வருகிறது.
கோலிவுட்டில் தற்போது பரபரப்பு கிளப்பி வரும் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன். நானும் ரவுடி தான் படத்தின் மூலம் பற்றிய காதல் தீ இன்று வரை கொளுந்துவிட்டு எரிகிறது.
படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு சென்றுவிடுகிறார். அங்கு போய் இருவரும் ஜாலியாக ஊர் சுற்றுவது போதாது என்று, விதவிதமாய் போட்டோ எடுத்து... அதை இன்ஸ்டாவில் போட்டு லைக்குகளை வாரிக்குவித்து வருகின்றனர்.
நயன் எங்கு போனாலும் விக்னேஷ் சிவனுடன் தான் செல்கிறார். பதிலுக்கு விக்கியும் நயனை அதிகாரம் செய்யாமல் தங்கமே, வைரமே என்று கொஞ்சுகிறார்.
சமீபத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை காதலன் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடி மகிழ்ந்தார் நயன்தாரா. கவர்ச்சி உடையில் காதலனுடன் இவர் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்களை ரசிக்க வைத்தது.
கடந்த 5 வருடங்களாக இந்த நயன் - விக்கி ரொமாண்டிக் ஜோடி லிவ்விங் டுகெதராக ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. லேடி சூப்பர் ஸ்டார் லெவலுக்கு உயர்ந்துவிட்ட நயன்தாரா இந்த வருடமாவது கல்யாணம் செய்து கொள்வாரா...? என அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே நயனும் - விக்கியும் லாக்டவுனில் ரகசிய திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், அதற்காக கோவில் ஒன்றிற்கு சென்று பரிகாரம் செய்துவிட்டு, கையோடு கல்யாணத்தையும் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின நிலையில் அது வதந்தியாக கடந்து சென்றது.
இதை தொடர்ந்து, இவர்களது திருமணம் குறித்து... புதிய தகவல் ஒன்று தீயாக சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
அதாவது காதலித்து போதும், இந்த வருடம் பிப்ரவரி மாதம் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை உறுதி செய்யப்படாத இந்த தகவல், உண்மையாகுமா? அல்லது வழக்கம் போல் வதந்தியாகவே கடந்து போகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.