MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பாலியல் புகாரில் சிக்கினால் சினிமாவில் பணியாற்ற தடை - சாட்டையை சுழற்றும் நடிகர் சங்கம்

பாலியல் புகாரில் சிக்கினால் சினிமாவில் பணியாற்ற தடை - சாட்டையை சுழற்றும் நடிகர் சங்கம்

Nadigar Sangam Meeting : பாலியல் புகாரில் யாரேனும் சிக்கினால் அவர்கள் திரைத்துறையில் பணியாற்ற 5 ஆண்டுகளுக்கு தடைவிதிக்கப்படும் என நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2 Min read
Ganesh A
Published : Sep 08 2024, 02:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Nadigar sangam

Nadigar sangam

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சங்க கட்டட பணிகளை மீண்டும் தொடர அமைச்சர் உதயநிதி, தன் சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயும், மேலும் 5 கோடி ரூபாய் பரிந்துரை செய்து ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

பின்னர் இதுகுறித்து துணைத் தலைவர் கருணாஸ் பேசும் போது சங்க கட்டடத்துக்கான கடன் வாங்கும் போது தேவையான டெபாசிட் தொகையில் பெரும் தொகையை ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு அமைச்சர் உதயநிதிக்கு நன்றி தெரிவித்தார். அமைச்சர் உதயநிதியின் முன்னெடுப்பால்தான் நடிகர் சங்க கட்டட பணிகள் மீண்டும் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்தார்.

24
Vishal

Vishal

தற்போது மலையாளத்தில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி அதன் மூலம் மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், தமிழ் திரையுலகிலும் இதுபோன்ற பிரச்சனைகள் உள்ளதா என்பது குறித்து விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்படும் என்று நடிகர் விஷால் அண்மையில் கூறி இருந்தார்.

அவர் கூறியதை போல் தற்போது தமிழ் சினிமாவில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து விசாரிக்க நடிகை ரோகிணி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. 

இதையும் படியுங்கள்... காதலனுடன் சண்டையா? திடீரென திருமணத்தை தள்ளிப்போட்டது ஏன்? நடிகை தமன்னா விளக்கம்

34
Nadigar sangam Meeting

Nadigar sangam Meeting

அந்த குழு பாலியல் சீண்டல் குறித்த புகார் வந்தால் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதோடு, அந்த பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு 5 ஆண்டுகள் திரைத் துறையில் பணியாற்ற தடைவிதிக்க முடிவு செய்துள்ளனர். 

அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையில் புகார் கொடுப்பதில் இருந்து அவர்களுக்கு வேண்டிய அத்தனை உதவிகளும் நடிகர் சங்கம் சார்பில் செய்துதரப்படும் எனவும் முடிவு செய்திருக்கின்றனர். பாலியல் புகார் சுமத்தப்படும் நடிகர்கள் முதலில் எச்சரிக்கப்பட்டு தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

44
Rohini

Rohini

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க அவர்களுக்கென்று தனி தொலைப்பேசி எண்ணும், மின்னஞ்சல் முகவரியும் கொடுக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக மீடியாக்களில் பேச வேண்டாம் என்றும் இந்த குழு அறிவுறுத்தி உள்ளது. அதேபோல் யூடியூப்பில் திரைத்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தை சார்ந்து யாரேனும் தவறாக பேசும்பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தால் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... திருமணமாகி 6 ஆண்டுகளுக்கு பின் பிறந்த முதல் குழந்தை... அம்மா ஆனார் நடிகை தீபிகா படுகோனே

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved