கண்களால் பேசி கியூட் ரோமஸ் பண்ணும் சிம்பு - கல்யாணி பிரியதர்ஷன்! 'மாநாடு' ஷூட்டிங் போட்டோஸ்!
நடிகர் சிம்பு நடித்து வரும் 'மாநாடு' படத்தில் லேட்டஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் வெளியாகி, ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துவரும் படம் மாநாடு சிலம்பரசன் கதாநாயகனாக நடித்துவரும் 'மாநாடு' படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி வருகிறார்.
கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், ஒய்.ஜி. மகேந்திரன், வாகை சந்திர சேகர், எஸ் ஏ சந்திர சேகர், அஞ்சனா கீர்த்தி, உதயா, மனோஜ் கே. பாரதி, பிரேம்ஜி, கருணாகரன், மகத், டேனியல் போப், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். உமேஷ் ஜே குமார் கலையை கவனிக்க ஸ்டண்ட் சில்வா சண்டைப் பயிற்சி கையாள மதன் கார்க்கி பாடல்கள் எழுத நடனம் அமைக்கிறார் ராஜூ சுந்தரம்.
அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற கதாபாத்திரத்தில் சிம்பு, உடல் எடையை குறைத்து செம்ம ஸ்டைலிஷாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது படக்குழுவினர், 'மாநாடு' படத்தின் லேட்டஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
சிம்பு மற்றும் கல்யாணி இருவரும் மிகவும் சந்தோஷமாக பேசும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
கியூட் ரொமான்ஸில்... கண்களாலேயே பேசி கொள்ளும் சிம்பு மற்றும் கல்யாணி இந்த லேட்டஸ்ட் போட்டோஸ் செம்ம வைரலாகி வருகிறது.