44 வயதிலும் ஹீரோயின் லுக்கில்... 10 வருடத்திற்கு பின் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் கமல் பட நடிகை!
தற்போது 44 வயதாகும் இவர், கடைசியாக 2011 ஆம் ஆண்டு வெளியான ஒஸ்தி படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு மட்டுமே தமிழில் நடனமாடிய நிலையில், 10 வருடத்திற்கு பின் மீண்டும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
பாலிவுட் ரசிகர்களை தன்னுடைய கவர்ச்சியால் கட்டிப் போட்ட நடிகைகளில் ஒருவர் மல்லிகா ஷெராவத். இவர் தற்போது ஒரு சில ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.
இவர் தமிழில் உலக நாயகன் கமலஹாசன் பத்து வேடங்களில் நடித்த, 'தசாவதாரம்' படத்தில் வில்லியாக நடித்து மிரட்டி இருந்தார்.
அதே போல் 'ஒஸ்தி' படத்தில் சிம்புவுடன் 'கலசலா' என்கிற பாடலுக்கு கலக்கலாக நடனமாடி தமிழ் ரசிகர்கள் நெஞ்சங்களை கொள்ளை கொண்டார்.
தற்போது 44 வயதாகும் இவர், கடைசியாக 2011 ஆம் ஆண்டு வெளியான ஒஸ்தி படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு மட்டுமே தமிழில் நடனமாடிய நிலையில், 10 வருடத்திற்கு பின் மீண்டும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
தம்பி வெட்டோத்தி சுந்தரம், செளகார்பேட்டை, பொட்டு உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் வடிவுடையான் இயக்கி வரும் அடுத்த திரைப்படம் ’பாம்பாட்டம்’ இந்த படத்தில், மல்லிகா ஷரவாத் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது.
ஜீவன் மற்றும் யாஷிகா ஆனந்த் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்த படத்தில் மல்லிகா ஷெராவத் இணைந்து உள்ளதாகவும் அடுத்தகட்ட படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்வார் என்றும் இயக்குனர் வடிவுடையான் தனது சமூக வலைத்தளத்தில் மல்லிகா ஷெராவத் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு உறுதிசெய்துள்ளார்.