நீங்க இப்படி செய்யலாமா?... நயன்தாராவிடம் செல்லமாக கோபித்துக்கொண்ட ரசிகர்கள்...!
கொரோனா பிரச்சனை காரணமாக, கிட்ட தட்ட கடந்த நான்கு மாதங்களாக, அணைத்து படப்பிடிப்பு பணிகளும் முழுமையாக முடங்கி உள்ளது. எனவே சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிழைப்பை ஓட்டி வந்த நடிகர்கள் முதல், கோடியில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர் - நடிகைகள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
இந்த நேரத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா செய்த காரியம் ரசிகர்களை மிகவும் பாதித்துள்ளது.
தமிழ் ரசிகர்கள் மனதில் ராணியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நயன்தாரா. தனது அசத்தல் நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கு சொந்தக்காரியாக வலம் வருகிறார்.
டாப் ஹீரோக்களின் படம் என்றாலே பர்ஸ்ட் சாய்ஸ் நயன் தான் என்கிற அளவிற்கு முன்னணி ஹீரோக்களும் கால்ஷீட் கேட்டு காத்திருக்கின்றனர். படத்தில் ஹீரோவை உருகி, உருகி காதலிக்கும் ஹீரோயின் கதாபாத்திரங்களை எல்லாம் விட்டுவிட்டு, கதையின் நாயகியாக வலம் வரக்கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
சிம்பு, பிரபுதேவா என அடுத்தடுத்து காதல் தோல்விகளை சந்தித்த நயன்தாரா, தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் இருப்பது அனைவரும் அறிந்த செய்தி. “நானும் ரவுடி தான்” படத்தின் மூலம் பற்றிய காதல் தீ இன்று வரை கொளுந்துவிட்டு எரிகிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக சமீபகாலமாக செய்திகள் வெளியாகின்றன.
எங்க தலைவி கதாநாயகிக்கு முக்கியம் உள்ள கதாபாத்திரத்தில் தான் நடித்து கெத்து காட்டுவார் என கூறி வந்த நிலையில், திடீர் என விளம்பரத்தில் நடித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
கோடிகளில் சம்பளம் வாங்கும் நயன்தாரா சம்பளத்தை இன்னும் அதிகரித்தால் கூட வாரிக்கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார். காரணம் நயனின் மார்க்கெட் வெல்யூ அப்படி.
அப்படியிருக்க உஜாலா விளம்பரத்தில் நயன்தாரா நடித்துள்ள ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது. இதுகுறித்து சோசியல் மீடியாவில் நயனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
அந்த விளம்பரத்தில் கருப்பு சேலையில் கும்முனு அழகில் அசர வைக்கிறார் நயன்தாரா.
ஆனால் இதை பார்த்த ரசிகர்களோ நாங்க உங்களை எந்த அளவுக்கு உயரத்தில் வைத்திருக்கோம். நீங்க போய் இந்த மாதிரி விளம்பரங்களில் நடிக்கிறீங்களே... வேண்டாம் மேடம் என அன்புக்கட்டளை போட்டுள்ளனர்.
ஆனால் சிலரோ நயன்தாராவின் அழகை மெய் மறந்து ரசித்து வருகின்றனர்.