இணை இயக்குனரை ரகசியமாக கரம் பிடித்த 'கயல்' ஆனந்தி..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!
பிரபல தமிழ் நடிகை 'கயல்' ஆனந்திக்கு இரகசியமாக திருமணம் நடைபெற உள்ளதாக நேற்று வெளியான தகவலை தொடர்ந்து தற்போது இவர் தன்னுடைய கணவருடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’கயல்’.
இந்த படத்தில் நாயகியாக அறிமுகமாகியவர் ஆனந்தி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, அனைவராலும் 'கயல்' ஆனந்தி என்றே அழைக்கப்பட்டார்.
இந்த படத்தை தொடர்ந்து, ’சண்டிவீரன்’, ’திரிஷா இல்லைனா நயன்தாரா’, ’விசாரணை’, என வரிசையாக திரைப்படங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார்.
அந்த வகையில் ஆனந்திக்கு திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தியது ’பரியேறும் பெருமாள்’ திரைப்படம். ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்திலும் ஆனந்தியின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதுவரை துளியும் கவர்ச்சி காட்டாமல், குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு, திடீர் என நேற்று இரவு இரகசிய திருமணம் நடைபெற உள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவியது.
இது பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணம் என்று கூறப்படுகிறது. மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
கயல் ஆனந்தி மூடர் கூடம்’ உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நவீன் அவர்களின் மைத்துனர் சாக்ரடீஸ் என்பவரை தான் கரம்பிடித்துள்ளார்.
இவர் ’அலாவுதீனின் அற்புத கேமரா’ ’அக்னிசிறகுகள்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் இணை இயக்குனராக பணி புரிந்துள்ளார். இவர்களது திருமண புகைப்படம் வெளியாக பலர் தொடர்ந்து மணமக்களை வாழ்த்தி வருகிறார்கள்.