சோறுபோடும் விவசாயிகளை தீவிரவாதிகள் என விமர்சித்த கங்கனா..! போலீசார் அதிரடி வழக்கு பதிவு..!
விவசாயிகளையும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களையும் தீவிரவாதிகள் என விமர்சனம் செய்த, நடிகை கங்கனா ரணாவத் மீது, போலீசார் அதிரடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மத்திய அரசு, விவசாயிகளுக்காக கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக, இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து, போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். அரசியல் உள்பட பல்வேறு விஷயங்களிலும், சர்ச்சையான கருத்தை தெரிவித்து பிரச்சனைகளில் சிக்க்கி வரும் கங்கனா ரணாவத், விவசாயிகள் அனைவரும் கொந்தளிக்கும் படியான பதிவு ஒன்றை போட்டார்.
அதாவது, "குடியுரிமை சட்டத்தை யாரெல்லாம் எதிர்த்தார்களோ அவர்கள் தான் விவசாய சட்டங்களையும் எதிர்க்கிறார்கள். இந்த சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் அனைவரும் தீவிர வாதிகள் என பதிவிட்டிருந்தார்".
இவரது இந்த கருத்து. விவசாயத்திற்காக போராடிவரும் பலரது மனதை புண்படுத்தியுள்ளதாக, கர்நாடகாவை சேர்ந்த ரமேஷ் நாயக் என்ற வழக்கறிஞர், தும்கூரு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மேலும் வன்முறைக்குத் தூண்டும் வகையில் இருப்பதால் கங்கனா ரனாவத் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153A, 504, 108 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தும்கூரு நகர எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் கங்கனா ரனாவத் FIR பதிவு செய்து விசாரிக்குமாறு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று கியாதசந்திரா காவல் நிலைய போலீஸார், கங்கனா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.