43 வயதில் பெண் குழந்தைக்கு தாயான கமல் பட நடிகை... கணவர், குழந்தையுடன் வெளியிட்ட க்யூட் போட்டோஸ்...!
கமல் உடன் விஸ்வரூபம் 1 மற்றும் 2வது பாகத்தில் நடித்த பூஜா குமார் தன்னுடைய 43வது வயதில் பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.
“காதல் ரோஜாவே” என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா குமார். அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பூஜா குமார் ஹாலிவுட், இந்தி படங்களில் நடித்து வந்தார்.
தமிழில் கமலுடன் “விஸ்வரூபம்” முதல் மற்றும் இரண்டாவது பாகம், உத்தம வில்லன் மற்றும் மண் பானையும் மீன் குழம்பும் ஆகிய படங்களில் நடித்தார்.
பூஜா குமார் திருமணமான செய்தி மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், தங்களது குழந்தை பிறந்துள்ளதாக அவருடைய கணவர் சோசியல் மீடியாவில் டபுள் ட்ரீட் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Pooja kumar
ஜாய் என்கிற திருமண ஏற்பாடுகளை செய்யும் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வரும் விஷால் ஜோஷி என்பவரை தான் பூஜா குமார் திருமணம் செய்துள்ளார். ஜோஷி தனது மகள் மற்றும் மனைவி பூஜாவுடன் பகிர்ந்துள்ள போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
“ஒரு காலத்தில் நாங்கள் இரண்டு பேர் தான் இருந்தோம். இப்போதும் மூன்று பேர். எங்கள் குட்டி மகள் நாவ்யா ஜோஷியை உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதில் நானும் பூஜாவும் மகிழ்ச்சியடைகிறோம்"
எனக்கு மிகச் சிறந்த வாழ்க்கைத் துணையாக இருப்பதற்கும், குட்டி நாவ்யாவை இந்த உலகத்துக்கு அழைத்து வந்ததற்கும் நன்றி பூஜா. எனது இந்த பிறந்தநாளை என் வாழ்நாளின் மிகச் சிறந்த பிறந்தநாளாக மாற்றிவிட்டாய். உங்கள் இருவரையும் அவ்வளவு நேசிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
அத்துடன் தங்களுடைய குட்டி மகளின் புகைப்படத்துடன் இருவரும் ஜோராக நின்று போஸ் கொடுப்பதையும் பகிர்ந்துள்ளார். இதையடுத்து பூஜா குமார் - விஷால் ஜோஷி தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
கணவருடன் பூஜா குமாரின் க்யூட் போஸ்
குழந்தை பிறந்த உற்சாகத்தில் தம்பதி