'காக்க காக்க' பார்ட் 2 படத்திற்கு ஓகே சொன்ன ஜோதிகா! சூர்யாவும் தயார்! ஆனால் இது ஒன்னு தான் பிரச்சனை!
நடிகை ஜோதிகா நடிப்பில், அவரது கணவர் தயாரித்திருந்த, 'பொன்மைகள் வந்தாள்' திரைப்படம் கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதை தொடந்து ஜோதிகா ரசிகர்களிடம் சமூக வலைத்தளம் மூலம் பேசி, இந்த படத்தை புரோமோட் செய்தார். அப்போது 'காக்க காக்க' படத்தில் நடிக்க நானும் சூரியாவும் தயாராக உள்ளதாக கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்
'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் நடித்த போது, நண்பர்களாக மட்டுமே இருந்த சூர்யா ஜோதிகா பின் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த ஜோடிகளின் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்து விட்டதால், தொடர்ந்து ஜூன் ஆர், மாயாவி, காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் நடித்தனர்.
கிட்ட தட்ட நான்கு வருடங்கள் காதலித்து, பெற்றோர் சம்மதம் பெற்று திருமணம் செய்து கொண்டனர்.
நடிகர் சூர்யா தன்னுடைய நடிப்பு திறமையை பல படங்களில் வெளிக்காட்டி இருந்தாலும், அவரை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக பார்க்க வைத்தது காக்க காக்க திரைப்படம்.
இந்த படத்தின் ரீல் காதலர்களாக மட்டும் இல்லாமல் ரியல் காதலர்களாகவே வாழ்ந்து நடித்தனர் அன்புசெல்வனும் - மாயாவும்
இந்தப்படத்தை தொடர்ந்து, இவர்கள் இணைந்து நடித்த மற்றொரு பேவரட் படம் என்றால் அது சில்லுனு ஒரு காதல்
திருமணத்திற்கு பிறகும் ஜோவை எந்த அளவிற்கு சூர்யா காதலிக்கிறார் என்பதை இந்த கட கண் பார்வை சொல்கிறது.
திருமணம் ஆகி குழந்தைகள் பெற்று கொண்டாலும் இன்னும் காதலர்கள் தான் இவங்க...
ஜோ... நீங்க ரொம்ப லக்கி என்று பல பிரபல நடிகைகள் சொல்கிறார்கள் ஏன் தெரியுமா சூர்யா கிடைத்ததற்கு தான்.
ஜோவும் காக்க காக்க படத்திற்கு தயார், சூர்யாவும் தயார் பின் என்ன பிரச்சனை என்று தானே கேக்குறீங்க, இந்த படத்தோட இயக்குனர் கெளதம் மேனன் இரண்டாம் பாக கதையோடு தங்களை அணுகினால் நடிக்க தயாராக இருக்கிறோம் என ரசிகர் கேள்விக்கு பதில் கூறியுள்ளார் ஜோ.