ரூ.200 கோடி பண மோசடி வழக்கு... நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி கோர்ட்
Jacqueline Fernandez : தொழிலதிபரின் மனைவியை மிரட்டி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
டெல்லியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரின் மனைவியை மிரட்டி ரூ.215 கோடி பண மோசடி செய்த் வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்தாண்டு கைது செய்தனர். அவர் தொழிலதிபரின் மனைவியை மிரட்டி பறித்த பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருந்தார்.
அதுமட்டுமின்றி பாலிவுட் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாகவும் தெரிவித்தார். அதிலும் குறிப்பாக இலங்கையைச் சேர்ந்தவரும், தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும் வலம்வரும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் உடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளார் சுகேஷ். அபேஸ் பண்ணிய பணத்தில் இருந்து அவருக்கு கோடிக்கணக்கில் பரிசுகளையும் வாரி வழங்கி வந்தது விசாரணையில் அம்பலமானது.
இதையும் படியுங்கள்... பொங்கலுக்கு விஜய்யின் வாரிசுடன் மோத உள்ள அஜித்தின் துணிவு.. இதில் உதயநிதி ரிலீஸ் பண்ண போறது எந்தபடம் தெரியுமா?
இதையடுத்து நடிகை ஜாக்குலினும் இந்த வழக்கின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தி, சுகேஷிடம் இருந்து அவர் பெற்ற பரிசுகள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர். இதன்பின்னர் அவருக்கு சொந்தமான ரூ.7.27 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், அவரையும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்த்தனர்.
இதனிடையே இந்த வழக்கில் தனக்கு ஜாமின் தரக்கோரி டெல்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார் ஜாக்குலின். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது அவருக்கு ரூ.50,000 பிணைத் தொகையை செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தியது. இதனால் சற்று நிம்மதி அடைந்துள்ளார் ஜாக்குலின்.
இதையும் படியுங்கள்... அவுங்க ஒரு டேமேஜ் ஹீரோயின்... காஃபி வித் காதல் பட விழாவில் மாளவிகாவை நோஸ் கட் பண்ணிய சுந்தர் சி