- Home
- Cinema
- சிறகடிக்க ஆசை ரோகிணியின் நிஜ கணவர் இவரா..? மேக்-அப் இல்லாத ஒரிஜினல் சல்மா எப்படி இருப்பார் தெரியுமா..?
சிறகடிக்க ஆசை ரோகிணியின் நிஜ கணவர் இவரா..? மேக்-அப் இல்லாத ஒரிஜினல் சல்மா எப்படி இருப்பார் தெரியுமா..?
சல்மா மற்றும் அவருடைய கணவர் இருவரும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள். சல்மா முஸ்லிம் மதத்தை சார்ந்தவர். அவருடைய கணவர் இந்து மதத்தை சார்ந்தவர்.

விஜய் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கும் சீரியல்தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் கிராமப்புறங்களிலும் நகரப்புறங்களிலும் அதிகமான ரசிகர்களால் தொடர்ந்து பார்க்கப்படுகிறது.
இந்த சீரியலில் கதாநாயகன் முத்துவிற்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போல வில்லியாக இருக்கும் ரோகிணிக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
‘சிறகடிக்க ஆசை’ தொடரில் ரோகிணி கதா பாத்திரத்தில் நடித்து வருகிறார் சல்மா... ‘பாரதி கண்ணம்மா’, ‘ராஜா - ராணி’ உள்ளிட்ட தொடர்களில் நடித்த சல்மாவிற்கு, ‘சிறகடிக்க ஆசை’ தொடர் மூலம் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.விஜய் டிவியின் முன்னணி சீரியல் ஆக தற்போது இருந்து வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல்.
அதில் வில்லி ரோகிணி ரோலில் நடித்து வருபவர் சல்மா அருண். ரோகிணி பற்றிய எல்லா உண்மைகளும் தெரியவந்து, அவரை விவாகரத்து செய்ய மனோஜ் முடிவெடுத்து நீதிமன்றம் செல்வது போல் தற்போது கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.
ரோகிணி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சல்மா அருண் ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் தான் வில்லியாக நடித்திருந்தார். அதற்கு முன்பு ஒரு சில திரைப்படத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தார்.
சீரியல் ஒருபக்கம் இருக்க, நடிகை சல்மா அருண் தனது கணவர் மற்றும் மகன் உடன் எடுத்து இருக்கும் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.
ரோகிணி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சல்மா அருண் ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் தான் வில்லியாக நடித்திருந்தார். அதற்கு முன்பு ஒரு சில திரைப்படத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தார்.
ஒரு சில திரைப்படத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் அவருக்கு சிறகடிக்க ஆசை சீரியல் தான் பெரிய அளவில் பிரபலம் கொடுத்தது. இந்த சீரியலுக்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஒரு பக்கம் ரோகிணியின் செயலை பலரும் திட்டிக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் ஐயோ பாவம் என்று பலருடைய அனுதாபத்தையும் ரோகிணி கேரக்டர் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
பொதுவாக ஒரு சில சீரியல்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விட்டால் அந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களையும் அதே கேரக்டராகவே ஏற்றுக் கொள்வார்கள். அதுபோலத்தான் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சல்மாவையும் ரோகிணியாகவே ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர்.
பொதுவாக பல நடிகைகள் திருமணத்திற்கு முன்பு சினிமாவில் அறிமுகமாகி நடித்து பிரபலமான பிறகு திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் சல்மா அதற்கு நேர் மாறாக இருந்திருக்கிறார். திருமணம் முடிந்து ஒரு குழந்தை பிறந்த பிறகுதான் இவர் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் அவருடைய கணவர் சம்மதத்துடன் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
சல்மா மற்றும் அவருடைய கணவர் இருவரும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள். சல்மா முஸ்லிம் மதத்தை சார்ந்தவர். அவருடைய கணவர் இந்து மதத்தை சார்ந்தவர்.
எங்கள் 10வது ஆண்டு நிறைவு - நாங்கள் ஒன்றாக ஒரு தசாப்தத்தை நிறைவு செய்து 11வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். என் வாழ்க்கையில் எல்லா மகிழ்ச்சியையும் நீங்கள் எனக்குக் கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் எப்போதும் என்னைக் கவனித்துக் கொண்டீர்கள், என் தவறுகளைச் சரிசெய்ய உதவினீர்கள், எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தீர்கள்.
மேக்-அப் இல்லாமல் சல்மா அருண்
உங்களுடன் என் வாழ்க்கையில் என் எல்லா மகிழ்ச்சியையும் நான் காண்கிறேன். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன், இந்த உலகில் வேறு எதுவும் முக்கியமில்லை. நீங்கள் என்னுடன் இருக்கும் வரை, என் முழு வாழ்க்கையும் அழகாகவும், மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் உணர்கிறது. எல்லா மகிழ்ச்சிக்கும் மிக்க நன்றி.
நீங்கள் மட்டுமல்ல - உங்கள் மூலம், எனக்கு ஒரு அற்புதமான குழந்தை பிறந்துள்ளது, நாங்கள் இருவரும் மிகவும் அழகான குடும்பப் பிணைப்பைக் கொண்டுள்ளோம், அதற்காக நாம் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ தொடரில் ரோகிணி கதா பாத்திரத்தில் நடித்து வருகிறார் சல்மா... ‘பாரதி கண்ணம்மா’, ‘ராஜா - ராணி’ உள்ளிட்ட தொடர்களில் நடித்த சல்மாவிற்கு, ‘சிறகடிக்க ஆசை’ தொடர் மூலம் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவர் படித்தது இளங்கலை கணிதம். சிறுவயதில் இருந்தே நடிப்பு மீது ஈடுபாடு உண்டு.
21 வயதில் எனக்குத் திருமணம் முடிந்தது. குடும்பம், குழந்தை என்று பிஸியாக இருந்தபோது, தோழி அவளின் பியூட்டி பார்லருக்கு மாடலிங் செய்யக் கேட்டுள்ளார். மாடலிங் செய்த அந்த முதல் போட்டோஷூட் மூலம் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன.
சின்ன பிராண்டுகளுக்கு மாடலிங் செய்தவர், ‘காம்ப்ளான்’, ‘டாடா உப்பு’ போன்ற பெரிய பிராண்டுகளுக்கு மாடலிங் செய்ய ஆரம்பித்துள்ளார். அதன் மூலம் விஜய் டிவி சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குடும்பம் எனக்குக் கொடுத்த சப்போர்ட் தான் இந்த வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் என்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.