அமிதாப் குடும்பத்தை சுற்றி வளைத்த கொரோனா... தொற்றுக்கு காரணம் இதுவா தீயாய் பரவும் புகைப்படங்கள்...!
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் குடும்பத்தில் அவர் உட்பட மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பரவ காரணம் இது தான் என்பது போல் சில புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கும், அவருடைய மகனும் முன்னணி நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி கடந்த 11ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஐஸ்வர்யா ராய், அவருடைய மகள் ஆராத்யா ஆகியோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஜெயா பச்சனுக்கு மட்டுமே தொற்று இல்லை என்பது திட்டவட்டமாக நிரூபணமானது.
இதையடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அமிதாப் பச்சனுக்கு சொந்தமான 4 பங்களாக்களையும் பூட்டி சீல் வைத்தனர்.
பம்பரமாய் சுழன்ற சுகாதாரத்துறை ஊழியர்கள் வீட்டின் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மேற்கொண்டனர்.
ஜல்சா, பிரதிஷா, ஐனாக், மற்றும் வெஸ்டா ஆகிய பங்களாக்கு சீல் வைத்த அதிகாரிகள் இதுவரை அங்கு பணியாற்றிய 30க்கும் மேற்பட பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் பாலிவுட்டின் டாப் ஸ்டாரான அமிதாப் பச்சன் இல்லத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது எவ்வாறு என அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர்.
அதில் ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அபிஷேக் பச்சன் தற்போது Breathe Into The Shadows என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார்.
அதற்காக லாக்டவுன் காலத்திலும் டப்பிங் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளார்.
இதற்காக அவர் தினமும் வீட்டை விட்டு டப்பிங் ஸ்டுடியோவிற்கு காரில் சென்று வந்துள்ளார்.
அப்படி அவர் சென்ற இடத்தில் யாருக்காவது தொற்று இருந்து அதன் மூலம் அபிஷேக் பச்சன் மற்றும் பிறகுக்கு தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் அதே வெப் சீரிஸில் அபிஷேக் உடன் நடித்து வந்த நடிகருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவு நெகடிவ் என வந்துள்ளது. நானும் அபிஷேக் பச்சனும் ஒரே நாளில் டப்பிங் செய்ய வரவில்லை என அந்த நடிகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அபிஷேக் பச்சன் டப்பிங் பணிகளை மேற்கொள்ளவதற்காக தினமும் காரில் சென்று வந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.