வனிதா வெளியேற காரணம் ரம்யா கிருஷ்ணனா? நெட்டிசன்கள் கேள்விக்கு ஒற்றை வார்த்தையில் பதில்!
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் ஜோடியில் இருந்து வனிதா திடீர் என வெளியேறியதற்கு காரணம் ரம்யா கிருஷ்ணன் என கூறப்படுவதை தொடர்ந்து, அவர் ஒற்றை வார்த்தையில் பதிலளித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய வனிதா விஜயகுமார், பல பிரச்சனைகளை கடந்து மீண்டும் திரைப்படம், மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிசியாக இயங்க துவங்கியுள்ளார். இவரது தைரியத்தை பாராட்டும் விதமாகவே இவருக்கு சமீப காலமாக பல ரசிகர்கள் சேர்ந்துவிட்டனர். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் ஜோடியில் இருந்து வனிதா திடீர் என வெளியேறியதற்கு காரணம் ரம்யா கிருஷ்ணன் என கூறப்படுவதை தொடர்ந்து, அவர் ஒற்றை வார்த்தையில் பதிலளித்துள்ளார்.
எந்த பிரச்சனை வந்தாலும் அதனை மிகவும் போல்டாக சமாளிக்கும் வனிதா, மூத்த பிரபலம் ஒருவரால் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகும் முடிவை எடுத்ததாக கூறி இருந்தார்.
குறிப்பாக என்னை விட எல்லா விதத்திலும் மூத்த நபர் அவர், கடுமையாக உழைத்து முன்னேறியவர். முன்னேறக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்களைக் தாழ்மையோடு பார்ப்பதும், அவர்களது ஊக்கத்தைக் கெடுத்து அவமானப்படுத்துவதையும் பார்க்க வேதனையாக இருக்கிறது. குறிப்பாக நீண்ட நாட்களின் போராட்டத்துக்குப் பின், குடும்பம், கணவரின் ஆதரவு இல்லாமல் சாதிக்கும், 3 குழந்தைகளின் தாயை இப்படி நடத்துகிறார்.
பெண்கள், சக பெண்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். மாறாக அவர்களின் வாழ்க்கையை கெடுக்க கூடாது. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து விடை பெறுவது வருத்தம் தான். மற்ற அத்தனை போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
வனிதா இப்படி கூறியதை தொடர்ந்து, அந்த நபர் யாராக இருக்கும் என்கிற கேள்வி பலரது மனதிலும் தோன்றியது. சிலர் நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் அந்த நபர் என்பது போல் கூறி இருந்தனர்.
ஆனால் இன்னும் சிலரோ ரம்யா கிருஷ்ணன் நடுநிலையோடு தான் செயல்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில் வனிதாவின் பர்பார்மென்ஸ்சுக்கு, ரம்யா கிருஷ்ணா மிகவும் குறைவான மதிப்பெண் வழங்கியது தான் இவரது இந்த முடிவுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தொடர்ந்து பலர் கேள்வி எழுப்பி வந்த நிலையில், ரம்யா கிருஷ்ணன் இது ஒரு பிரச்சனையே இல்லை. இதற்க்கு என்னுடைய பதில் 'நோ கமெண்ட்ஸ்' என்று கூலாக பதிலளித்துள்ளார்.