ஹேம்நாத் காதல் வலையில் சிக்கிய சீரழிந்த தொகுப்பாளினி..? கர்ப்பமானதால் காவல்துறை வரை சென்ற விவகாரம்!
சித்ரா தற்கொலை விவகாரம் குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டு வரும், ஹேம்நாத்தின் நண்பர் ரோஹித் ஏற்கனவே ஒரு பாலியல் பலாத்காரா வழக்கில் ஹேம்நாத் சிக்கியதாக கூறியுள்ள நிலையில், அந்த புகாரை கொடுத்தது பிரபல தொகுப்பாளினி என்கிற தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை சம்பவம் குறித்து, இதுவரை பல மர்மங்கள் நிலவி வரும் நிலையில், ஹேமந்த்தின் நண்பர் ரோஹித் மூலம், சற்றும் எதிர்பார்க்காதா தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.
சித்ராவுக்கும் தனக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்றும், அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியாததுபோல் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார் ஹேம்நாத்.
ஆனால் அவரது 10 வருட நண்பர் ரோஹித், வெளியிட்ட ஆடியோ உட்பட, பேட்டியில் அடுத்தடுத்து தெரிவித்து வரும் தகவலைகள் ஹேம்நாத் தான் தற்கொலைக்கு தூண்டியுள்ளார் என்பதை சந்தேகத்தை வலுக்க செய்துள்ளது.
சித்ராவுடனான காதல், திருமண சர்ச்சை ஒருபுறம் இருக்க.... ஏற்கனவே ஹேம்நாத் மீது தி.நகரில் பாலியல் வழக்கு உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், பிரபல தொகுப்பாளினி தான், ஹேம்நாத்தின் காதல் சர்ச்சையில் சிக்கி சீரழிந்துள்ளதாகவும், அந்த தொகுப்பாளினியை கர்ப்பமாக ஆக்கி விட்டு பின்னர் அந்த கரு கலக்க பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தை ஹேமந்த்தின் தந்தை பணம் கொடுத்து சரி செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே சித்ராவின் தோழிகள் மற்றும் சக நடிகைகள் ஹேமந்த் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமற்றி வந்த நிலையில் இந்த தகவல் இவர் மீதான சந்தேகத்தை மேலும் வலுக்க செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.