ஹாட் பிகினியில் அமலா பால் ... அப்படியொரு போஸில் ரசிகர்களிடம் கேட்ட அதிரடி கேள்வி...!
இயக்குநர் ஏ.எல். விஜய்யிடம் விவாகரத்து பெற்ற பின்னர் நடிகை அமலா பால் முழுக்க திரைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார். ரத்னகுமாரின் ஆடை படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி அடைந்தது. இதையடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மீண்டும் வலம் வர ஆரம்பித்துவிட்டார். முழுக்க ஹீரோயினை மையமாக கொண்ட அதோ அந்த பறவை போல படத்தில் நடித்து முடித்துள்ளார். பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக தனது ஹாட் போட்டோஸை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்த அமலா பால், முதன் முறையாக தனது ஹாட் பிகினி போட்டோவை வெளியிட்டு சோசியல் மீடியாவை திக்குமுக்காட வைத்துள்ளார்.
“நீலதமரா” என்ற மலையாளப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அமலா பால், “சிந்து சமவெளி” படம் மூலம் தமிழ் சினிமாவிலும் கால் ஊன்றினார்.
தமிழில் மைனா, நிமிர்ந்து நில், முப்பொழுதும் உன் கற்பனைகள், வேலையில்லா பட்டதாரி, தலைவா, தெய்வத் திருமகள் போன்ற வெற்றிப் படங்களில் நடித்தார்.
விவகாரத்திற்கு பிறகு தீவிர பட வேட்டையில் இறங்கியுள்ள அமலா பால் தனது ஹாட் போட்டோஸை வெளியிட்டு ரசிகர்களை நிலைகுலைய வைக்கிறார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கேரளாவில் உள்ள அம்மாவுடன் தங்கியுள்ள அமலா பால் நாள்தோறும் கலக்கலான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
மேலும் தனது நண்பர்களுடன் ஜாலியாக பொழுது போக்குகிறார். ஆண் நண்பர்களுடன் வேட்டி, சட்டையில் கெத்தாக நின்று அமலா பால் கொடுத்த போஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்தது.
அதையடுத்து அதிரடியாக ஆண் நண்பரின் மொட்டை தலையில் முத்தம் கொடுத்து தீயே இல்லாமல் சோசியல் மீடியாவை பற்றி எரிய வைத்தார்.
தற்போது முதன் முறையாக தனது ஹாட் பிகின் போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவிற்கு ரசிகர்களின் கமெண்ட்ஸும், லைக்குகளும் சும்மா அள்ளுது.
அத்துடன், “சிலர் தங்கள் வாழ்க்கையை, நிம்மதியாக ஓய்வெடுக்கும் ஒரே நோக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். நீங்கள் ஏன் நிம்மதியாக வாழ முயற்சிக்கவில்லை? உலகத்தால் இப்போது சிலவற்றை செய்ய முடியும் என்று வழக்கம் போல ரசிகர்களுக்கு தத்துவத்தை அள்ளித்தெளித்துள்ளார்.