'தி ஃபேமிலி மேன் 2 ' சீரிஸில் நடிக்க சமந்தா மற்றும் பிரியாமணி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக, நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'தி ஃபேமிலி மேன் 2 ' வெப் சீரிஸில் நடிக்க அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் ராஜ் மற்றும் டீகே ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள 'தி ஃபேமிலி மேன்' இணையதள தொடரின் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, தற்போது இரண்டாவது பாகமும் வெளியாகியுள்ளது.
குற்றச் செயல்களை கண்டறிந்து தடுப்பது போலவும், சென்னையில் குண்டு வெடிப்பிற்கு இலங்கையைச் சேர்ந்த தீவிரவாதிகள் திட்டமிட படுவது போன்றும் காட்சிகள் சித்தரிக்க பட்டுள்ளன.
இந்த காட்சிகளில் இலங்கையைச் சேர்ந்த தீவிரவாத தமிழ் பெண்ணாக சமந்தா நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த வெப் சீரிஸுக்கு தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது.
தமிழகத்தை சேர்த்த பல அரசியல் கட்சியினர் மற்றும் இயக்குனரும், 'நாம் தமிழர் கட்சியின்' ஒருங்கிணைப்பாளருமான சீமான், உள்ளிட்ட பலர் இந்த தொடரை தடை செய்யவேண்டும் என குரல் கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த தொடரில் நடிக்க சமந்தா, பிரியா மணி போன்றோர் பெற்ற சம்பளத்தில் விவரம் குறித்து தகவல் வெளியே கசிந்துள்ளது.
தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு ரூபாய் 1 கோடி முதல் ஒன்றரை கோடி வரை மட்டுமே சம்பளம் வாங்கும் நிலையில் ’தி பேமிலிமேன் 2’ தொடருக்காக அதைவிட இரண்டு மடங்கு சம்பளம் வாங்கி உள்ளார் என்ற வெளிவந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
மேலும் இந்தத் தொடரில் நடித்த மனோஜ் பாஜ்பாய்க்கு ரூபாய் 10 கோடி சம்பளம் என்றும் ப்ரியாமணிக்கு ரூபாய் 80 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.