இன்று பிறந்தநாள் கொண்டாடும் துல்கர் சல்மானின்... சுவாரஸ்யமான காதல் கதை! திருமணத்தில் முடிந்தது எப்படி?
தமிழில், வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகர் துல்கர் சல்மான் பிறந்தநாள் இன்று.
இவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவருடைய சுவாரஸ்யமான காதல் கதையை பற்றி தான் இன்று தெரிந்துகொள்ள போகிறோம்.
துல்கர் சல்மான் மற்றும் கட்டிடக் கலைஞர் அமல் சுஃபியா ஆகியோர் அக்டோபர் 22, 2011 அன்று திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளனர், மே 2017 இவர் பிறந்தார்.
அண்மையில் தன்னுடைய காதல் கதை பற்றி பிரபல இணையவழி ஊடகம் ஒன்றில் பேசியுள்ளார் துல்கர் சல்மான்.
அதில் தனது மனைவியை முதல்முறையாக சந்தித்த விதம் மற்றும் அவர்கள் எப்படி திருமணம் செய்துகொண்டார்கள் என்பது குறித்து பேசியுள்ளார்.
துல்கர் சல்மான் "நான் எனது படிப்பை முடித்து விட்டு அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்த பிறகு, எனக்கு திருமணம் செய்து வைப்பதில் அனைவரும் ஆர்வமாக இருந்தனர்.
எனது நண்பர்களும் குடும்பத்தினரும் எனது பள்ளித் தோழி ஒருவரின் பெயரை கூறினர். அவர் என்னை விட ஐந்து வயது சிறியவர். என்னுடைய நண்பர்கள் பியோ டேட்டா எல்லாம் வைத்து பெண் தேடி வந்தனர்.
எதிர்பாராமல் பல முறை நான் ஒரு பெண்ணை சந்திக்க நேர்ந்தது. ஒருமுறை நான் சினிமாவிற்கு சென்றேன் அவளும் அங்கு இருந்தாள் அது எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுத்தது.
பின்னர் அவரிடம் மோதிக்கொண்ட சம்பவம் ஒன்று நேர்ந்தது. பின்னர் சமாதானம் ஆகி காபீ ஷாப்பில் சந்தித்து பேசினோம். இருவரும் பிடித்ததால் காதலிக்கவும் துவங்கினோம்.
பின்னர் இது குறித்து இரு வீட்டு பெற்றோரிடமும் கூறி திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார் துல்கர் சல்மான்.