இந்தவாரம் இரண்டு பேர் வெளியேற்றப்பட்டார்களா? மூன்றது ப்ரோமோவால் வந்த புது குழப்பம்.!
கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு போட்டியாளர் யாரும் வெளியேற்றப்படாத நிலையில், இன்றைய தினம் ஒரு போட்டியாளர் வெளியேற உள்ளார் என்பது நாம் அறிந்தது தான்.
நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்த அனிதா, சோம், ஆரி, சம்யுக்தா, ரியோ, பாலாஜி மற்றும் சுசி ஆகியோர்களில் சோம், ஆரி, பாலாஜி, ரியோ ஆகியோர் ஏற்கனவே கைப்பற்றப்பட்டதாக அறிவித்தார்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01eqqz1v7x66hg3dm4wzjyj5nt/b2-jpg_300x141xt.jpg)
தற்போது சுசித்ரா, அனிதா மற்றும் சம்யுக்தா ஆகிய மூவரில் ஒருவர் வெளியேற வேண்டிய நிலை உள்ளது.
இந்த மூவரில் ஒருவரை காப்பாற்ற வேண்டும் என்றால் யாரை காப்பாற்றலாம் என கமல்ஹாசன் முதலில் பாலாஜியை பார்த்து கேட்க, அவர் சம்யுக்தா பெயரை கூறுகிறார்.
தன்னிடம் நெருக்கமாக பழகிய பாலாஜி தன்னுடைய பெயரை சொல்லாதது சுசிக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது என கூற வேண்டும்.
அதன்பின் அர்ச்சனா, சோம், ரியோ உள்பட ஒருசிலர் சம்யுக்தாவின் பெயரையே கூறியதால் சம்யுக்தா காப்பாற்றப்பட்டார் என்பதை அறிவிக்கிறார்.
பின்னர் இன்றைய நிகழ்ச்சியில் வெளியேறும் பொறியாளரை வழியனுப்பி வைத்து விட்டு மற்ற போட்டியாளர்கள் உள்ளே வரும் காட்சி இடம் பெற்றுள்ளது.
இதில் சுசி ,அனிதா ஆகிய இருவருமே இல்லை. எனவே சுசி மற்றும் வெளியேறினாரா ? அனிதாவும் சேர்ந்து வெளியேறினாரா என்கிற புதிய குழப்பம் உருவாகியுள்ளது.