சாத்தியமா இல்ல பிக்பாஸ்..! கதறி அழுத்த சுரேஷ்... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் அரக்கர்கள் மற்றும் ராஜ வம்சத்தினர் டாஸ்க் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாராத சில சம்பவங்கள் போட்டியாளர்களை அழ வைத்துள்ளது.
இரண்டாவது புரோமோவில், சுரேஷ் தன்னை அடித்து விட்டதாக சனம் ஷெட்டி ஆவேசமாகி, ‘வெளியே வாடா’ என்று சுரேஷை மரியாதை இல்லாமல் பேசி அசிங்கப்படுத்தினார்.
இந்த நிலையில் சற்று முன் வெளியான மூன்றாவது புரமோவில் சுரேஷ், கன்ஃபக்சன் அறைக்கு தன்னை அழைக்குமாறு சுரேஷ் கூறுகிறார்.
உள்ளே செல்லும் சுரேஷிடம் பிக்பாஸ் ‘சுரேஷ் நீங்கள் இதை தெரிந்து தான் செய்தீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு சுரேஷ், ‘சத்தியமாக இல்லை என்றும், எந்த காரணத்தை முன்னிட்டும் நான் வேண்டுமென்றே செய்யவில்லை என்றும் அவ்வாறு செய்வதாக இருந்தால் நேரடியாக செய்திருப்பேன் என்றும் அவர் கூறினார்.
அதன்பின் அவர் கதறி அழுத அவர், ‘என்னை வச்சு கார்னர் செய்கிறார்கள் என்றும், நிறைய விஷயங்கள் என் காதில் விழுந்தும், நான் அமைதியாக நானாக இருக்க முயற்சிக்கின்றேன்’ என்றும் கதறி அழுத காட்சிகள் இன்றைய நிகழ்ச்சியை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிகழ்ச்சியை பார்த்தல் தான் சுரேஷ் என்ன நோக்கத்துடன் சனம் ஷெட்டியை அடித்தார் என்பதும், மக்கள் மத்தியில் இவருக்கு இருக்கும் ஆதரவு நீடிக்குமா அல்லது குறையுமா என்பதும் தெரியவரும்.