கமல் முன்னால் மீண்டும் பாலா கையில் சிக்கிய ஆரி..! பரபரப்பான புரோமோ...
இறுதி நாட்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், பிரச்சனைகள் முன்பை விட அதிகமாகவே நடந்துவருகிறது. ஒரு கட்டத்தில் ஆரியே நேற்று பொறுமை இழந்து நான் கமல் சாரிடம் சொல்லிவிட்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறிவிடுவேன் என கூறி இருந்தார்.
ஆனால் கடைசியில் ஒரு வழியாக இந்த பிரச்சனை முடிவுக்கும் வந்தது. பாலவே ஆரியிடம் வந்து மன்னிப்பும் கேட்டார்.
இந்நிலையில், இன்றைய முதல் புரோமோவில் பாலாஜி அழுதபடி தன்னுடைய தவறுகளை பிக்பாஸ் அறையில் ஒப்புக்கொண்ட காட்சி இடம்பெற்றது.
இதைத்தொடர்ந்து வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில், பிக்பாஸ் தற்போது வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் அனைவருக்கும் மற்ற போட்டியாளர்கள் புகைப்படம் கொடுக்கப்படுகிறது.
இதில் அவர்கள் கையாண்டு வரும் ஸ்டாட்டர்ஜி பற்றி கமல் கேட்கிறார்.
முதலில் எழும் சோம், தனக்கு ஆஜித் புகைப்படம் வந்திருப்பதாகவும்... தனக்கு தெறித்து அவர் எந்த விதமான கேம் பிளானும் இல்லை என தெரிவிக்கிறார்.
ஆரி தனக்கு ரம்யா பெயர் வந்திருப்பதாக கூறி... காலர் டாஸ்கில் ரமேஷிடம் கேட்க கேள்வி இல்லை என தெரிவித்தார். ஷிவானியை ஸ்வாப் செய்து கொள்கிறீர்களா என கேட்டபோது அவர் அதனை செய்யவில்லை என தெரிவிக்கிறார். உடனே கமல் நான் ஸ்டேடர்ஜி பற்றி கேட்கிறேன் என்றதும் , ரம்யா செம்ம ஹாப்பியாக சிரிக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து பேசிய ஆரி, ரம்யா எதையும் தைரியமாக முன் வைக்கவில்லை என கூறுகிறார்.
ரம்யா தனக்கு வந்துள்ளது ரியோ என்றும், அவர் பிரச்சனைகள் வரும் போது, சேப்பாக பிரச்னையை தவிர்க்க வேண்டும் என்பதற்காக மேலோட்டமாக வேறு ஒரு விஷயத்தை கன்வே பண்ணுகிறாரோ என தனக்கு தோன்றுவதாக கூறுகிறார்.
பின்னர் பாலாஜி தனக்கு வந்திருப்பது ஆரி என சொல்லும் போதே... அடுத்ததாக இவர் என்ன கூறுவார் என்கிற எதிர்பார்ப்பிலேயே இந்த புரோமோ முடிவடைந்துள்ளது