புது வாய்ப்புக்காக பழசை கழட்டி விட்ட ரேஷ்மா! அதிரடியா சீரியலில் நுழையும் பிரஷாந்த் பட ஹீரோயின்! யார் தெரியுமா?
பிக்பாஸ் ரேஷ்மா, சமீபத்தில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியலான 'பாக்கியலட்சுமி' சீரியலில் என்ட்ரி கொடுத்த நிலையில், இவர் ஏற்கனவே நடித்து வந்த சீரியலில் இருந்து விலகி ஷாக் கொடுத்துள்ளார். மேலும் புதிதாக இணைந்துள்ள நடிகை பற்றிய புகைப்படமும் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Reshma pasuleti
சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சன் சிங்கர்' நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவார் ரேஷ்மா. அதை தொடர்ந்து, 'வாணி ராணி', 'மரகத வீணை', 'உயிர்மெய்' போன்ற பல சீரியல்களில் நடித்தார். சின்னத்திரையை தாண்டி, வெள்ளித்திரையில் கடந்த 2015 ஆண்டு வெளியான 'மசாலா’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
Reshma pasuleti
இந்த படத்தை அடுத்து இவர் நடித்த 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் இவரின் புஷ்பா கதாப்பாத்திரம் மிகவும் பிரபலம். ரேஷ்மா பசுபலேட்டி பிரபல நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினருமாவார்.
Reshma pasuleti
பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட தனது முதல் திருமணத்தில் தோல்வியடைந்த ரேஷ்மா, அமெரிக்காவில் வசிக்கும் போது மீண்டும் திருமணம் செய்துகொண்டார். அந்த காதல் தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. இதையடுத்து இரண்டாவது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரையும் விவாகரத்து செய்துவிட்டு, தனியே வசித்து வந்த ரேஷ்மா.
Reshma pasuleti
மூன்றாவதாக நிஷாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து வருவதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
Reshma pasuleti
ரசிகர்களால் குணச்சித்திர நடிகையாக அறியப்பட்ட ரேஷ்மா, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினர். பெரிதாக எந்த ஒரு அவப்பெயரும் இன்றி வெளியேறி நியூட்ரல் ரேஷ்மா என பெயர் எடுத்தார்.
Reshma pasuleti
அவ்வப்போது, சமூகவலைதளத்தில் தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிட்டு, பட வேட்டை நடத்த தொடங்கினார். அதன் பயனாக தற்போது ரேஷ்மா, பேய்மாமா, போடா முண்டம், மை பர்பெக்ட் ஹஸ்பேண்டு ஆகிய மூன்று படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
Reshma pasuleti
மேலும் சீரியலிலும் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பால், பட்டையை கிளப்பி வந்தார். அந்த வகையில்... சன் டிவி சீரியலில் ஒளிபரப்பாகி வரும் 'அன்பே வா' சீரியலில், கொடூர வில்லியாக நடித்து வருகிறார்.
Reshma pasuleti
சமீபத்தில் விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியலில், ராதிகா வேடத்தில் நடித்து வந்த, நந்திதா ஜெனிபர் வெளியேற அவருக்கு பதில் தற்போது ரேஷ்மா அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
vinodhini
புதிய வாய்ப்பு கிடைத்து விட்டதாலோ என்னவோ.. அன்பே வா சீரியலில் இருந்து ரேஷ்மா விலகி விட்டதாக கூறப்படுகிறது. இவருக்கு பதில் இனி, இவருடைய கதாபாத்திரத்தில், 'வண்ண வண்ண பூக்கள்' படத்தில் நடிகர் ப்ரஷாந்துக்கு ஹீரோயினாக நடித்துள்ள வினோதினி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.