தாறுமாறாக குண்டாகி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய பிக்பாஸ் அபிராமி..! ஷாக்கில் ரசிகர்கள்..!
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியதால் மூலமும், , தல அஜித்துடன் 'நேர்கொண்ட பார்வை', படத்தில் நடித்ததன் மூலமும் மிகவும் பிரபலமான அபிராமி வெங்கடாச்சலம் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு தாறுமாறாக குண்டாகி உள்ளார்.
நடிகையும் மாடலுமான அபிராமி வெங்கடாச்சலம், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு விளையாடினார்.
16 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்ட இவர், நிகழ்ச்சி ஆரம்பமான போது, மிகவும் ஜாலியான போட்டியாளராக அனைவராலும் அறியப்பட்டாலும், பின் எதற்கு எடுத்தாலும் அழுது கொண்டே இருந்ததால், அழுமூஞ்சி அபிராமியாகவே பார்க்கப்பட்டார்.
அபிராமி பிக்பாஸ் வீட்டின் உள்ளே வரும் போது, மாடலாக மட்டுமே அனைவருக்கும் தெரிந்த நிலையில், வெளியில் செல்லும் போது நடிகையாக பார்க்கப்பட்டார்.
இவர் பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது.. வெளியான 'நேர்கொண்ட பார்வை' படத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தது.
இந்நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக, கடந்த 7 மாதங்களாக வீட்டிலேயே முடங்கி இருந்த அபிராமி எக்கச்சக்கமாக எடை கூடியுள்ளார்.
இதுகுறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி, பார்க்கும் ரசிகர்களையே அதிர்ச்சியடை வைத்துள்ளது. அந்த புகைப்படம் இதுதான்.