“உங்க வேலையை மட்டும் பாருங்க”... கிசுகிசு பேச்சுபவர்களை கிழித்தெடுத்த வனிதா...!
ஆளுக்கு தன்னை விமர்சிக்க ஆரம்பித்துள்ள நிலையில் வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளுத்து வாங்கியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த வனிதா சின்னத்திரை நிகழ்ச்சியில், தன்னுடைய யூ-டியூப் சேனல் என படுபிசியாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். ரசிகர்கள் பலரும் அக்கா...அக்கா... பாசத்தை பொழிந்தனர்.
ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்து ஆன வனிதா, பீட்டர் பால் என்பவரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். லாக்டவுனில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தது.
பீட்டர் பால் சமாச்சாரம் வெளியே வராத வரை வனிதாவின் திருமணத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் மனைவி மற்றும் பிள்ளைகளை தவிக்கவிட்டு வந்ததாக பால் மீது எழுந்த பகீர் குற்றச்சாட்டு வனிதா மீதான எதிர்ப்பு அலைகள் அதிகரித்தது.
பீட்டர் பால் மிகப்பெரிய குடிகாரர் என்றும், பல பெண்களுடன் தொடர்பில் இருந்தவர் என்றும் எலிசபெத் அப்போத குற்றச்சாட்டினார். ஆனால் அதை காதில் வாங்காத வனிதா, பீட்டர் பால் ஒரு ‘டீடோட்டலர்’ எங்கள் கல்யாணத்தில் கூட ஷாம்பெயின் குடிக்காமல் ஒயிட் ஒயின் தான் குடித்தார் என சப்போர்ட் செய்தார்.
பல சர்ச்சைகள், பிரச்சனைகளுக்குப் பிறகு வாழ ஆரம்பித்த வனிதாவும், பீட்டர் பாலும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. கோவாவில் வனிதாவிடம் பீட்டர் பால் குடித்துவிட்டு தகராறு செய்ததாகவும், இதனால் பீட்டர் பாலை வனிதா அடித்து விரட்டிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
அதை உறுதி செய்த வனிதா குடிபோதையில் பீட்டர் பால் நிறைய தவறு செய்துவிட்டார். இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்று கூட எனக்கு தெரியாது என கண்ணீர் விட்டு கதறியபடி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இதையடுத்து வனிதாவின் வாழ்க்கை குறித்தும், பீட்டர் பால் பற்றியும் பலரும் கருத்து கூற ஆரம்பித்தனர். ஏன் கஸ்தூரி கூட பீட்டர் பால் விவகாரத்தில் வனிதாவை மீண்டும் சீண்டியிருந்தார்.
ஆளுக்கு தன்னை விமர்சிக்க ஆரம்பித்துள்ள நிலையில் வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில், என் மீது அன்பும், அக்கறையும் வைத்திருக்கும் அனைவருக்கும்...என் வாழ்க்கையின் இன்ப, துன்பங்கள் குறித்து நான் உங்களுக்கு எப்பொழுதுமே அப்டேட் கொடுப்பேன். என் வாழ்க்கை பற்றி கணித்து, கிசுகிசுப்பவர்கள் தயவு செய்து உங்களின் வேலையை மட்டும் பார்க்கவும். ஒரு போலி பி.ஆர்.ஓ. அரைவேக்காடு செய்தியை பரப்புகிறார்.
தங்களுக்கு பிடித்தது போன்று வாழ அனைவருக்கும் உரிமை உண்டு. அவர்கள் தான் வாழணுமே தவிர வேறு யாரும் இல்லை. அதனால் என் வாழ்க்கையில் தலையை நுழைப்பதை விட்டுவிட்டு உங்கள் வாழ்க்கையை கவனிக்கவும். நான் தைரியமானவள், பலரின் அன்பும், ஆசியும் பெற்றவள். நான் எப்பொழுதும் நலமாக இருப்பேன். நன்றி என்று தெரிவித்துள்ளார்.