கண்டாங்கி சேலை, இடையில் கூடை... வில்லேஜ் ஸ்டைலில் சாக்ஷி அகர்வால் நடத்திய வயல்வெளி போட்டோ ஷூட்...!
கண்டாங்கி சேலை கட்டி கிராமத்து ஸ்டைலில் சாக்ஷி அகர்வால் நடத்தியுள்ள போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
காலா, விஸ்வாசம் படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்தவர் சாக்ஷி அகர்வால். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அம்மணிக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தாலும் ரசிகர்களை என்றும் மறக்காத சாக்ஷி அகர்வால், சோசியல் மீடியாவில் தன்னுடைய ஹாட் போட்டோக்களை பதிவிட்டு குஷியாக்கி வருகிறார்.
எப்போதும் வீட்டின் பால்கனியில் குட்டை டவுசர், இடை தெரிய புடவை என சகட்டுமேனிக்கு போட்டோ ஷூட் நடத்தி வந்த சாக்ஷி தற்போது முற்றிலும் வித்தியாசமான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
பார்மி பொம்மையையும், மெழுகு சிலையை சேர்த்து செஞ்ச அழகி நீ என ரசிகர்கள் கவிதை பாடும் அளவிற்கு அழகாக இருக்கும் சாக்ஷி அகர்வால் அச்சு அசலாக கிராமத்து பெண்ணாகவே மாறியுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கண்டாங்கி சேலையைக் கட்டிக்கொண்டு வயல்வெளியில் கிராமத்து பெண் போலவே இடையை வளைத்து, நெளித்து நடந்து ரசிகர்களை மனதை கொள்ளையடித்துள்ளார்.
இடையில் பூக்கூடை, கையில் தூக்குச் சட்டி என வரப்பில் விதவிதமாக நடந்து சாக்ஷி அகர்வால் கொடுத்துள்ள போஸ்கள் லைக்குகளை அள்ளுகிறது.
அதுமட்டுமின்றி ஹேர் ஸ்டைலில் கூட அப்படியே மண் வாசனையை காப்பியடித்துள்ள சாக்ஷி , அந்த கொண்டையை சுற்றிலும் அழகாக பூவைத்து, அளவாக அலங்காரம் செய்திருப்பது கண்களை பறிக்கிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அடக்க ஒடுக்கமான லுக்கில் சாக்ஷி நடத்தியுள்ள இந்த போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.