அடுத்த ரவுண்டுக்கு தயாரான ஸ்ரீதிவ்யா... 3 வருஷத்துக்கு அப்புறம் இளம் வாரிசு நடிகருடன் ஆட்டம் ஆரம்பம்...!
“சங்கிலி புங்கிலி கதவ தொற” படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் காணாமல் போன ஸ்ரீதிவ்யா, மூன்று வருடங்களுக்குப் பின் ரீஎன்ட்ரி ஆகிறார்.
சிவகார்த்திகேயனின் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. ஊதா கலரு ரிப்பன் பாடலும், பாவடை தாவணியில் இவர் காட்டிய ஸ்வீட் அண்ட் க்யூட் ரியாக்ஷன்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதனைத் தொடர்ந்து ஜீவா, ஈட்டி, மருது, காக்கி சட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். இளம் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த ஸ்ரீதிவ்யா, இதுவரை ஓவர் கவர்ச்சி காட்டி நடித்தது கிடையாது.
பிரபல இயக்குநர் அட்லி தயாரிப்பில் 2017ம் ஆண்டு வெளியான “சங்கிலி புங்கிலி கதவ தொற” படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் காணாமல் போன ஸ்ரீதிவ்யா, மூன்று வருடங்களுக்குப் பின் ரீஎன்ட்ரி ஆகிறார்.
இளம் ஹீரோக்களில் ஒருவரான கௌதம் கார்த்திக் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் .
அதர்வா நடித்த ’பாணா காத்தாடி’, 'செம போத ஆகாதே’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இந்தப் படத்தை இயக்க உள்ளார்.
அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக உள்ள இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா பிசியோதெரபி மருத்துவராக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.