- Home
- Cinema
- எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்... பிரபல நடிகரின் பட வாய்ப்பை தூக்கியெறிந்த சுவாசிகா
எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்... பிரபல நடிகரின் பட வாய்ப்பை தூக்கியெறிந்த சுவாசிகா
தெலுங்கில் நடிகர் ராம்சரண் உடன் பிரம்மாண்ட படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை நடிகை சுவாசிகா விஜய் நிராகரித்துள்ளார். அதன் பின்னணி பற்றி பார்க்கலாம்.

Swasika Declines Peddi Movie
சிறந்த நடிகைக்கான மாநில விருதை 'வாசந்தி' படத்தின் மூலம் வென்றவர் சுவாசிகா விஜய். சினிமா மற்றும் சின்னத்திரையில் பிரபலமான இவர் தற்போது பிற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். லப்பர் பந்து படத்தில் இவர் நடித்த யசோதை கதாபாத்திரம் வேறலெவலில் ரீச் ஆனது. அப்படத்தின் வெற்றிக்கு அவரின் கேரக்டரும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக அவருக்கும் நடிகர் அட்டக்கத்தி தினேஷுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி வேற லெவலில் ஒர்க் அவுட் ஆகி இருந்தது.

சுவாசிகா ரிஜெக்ட் பண்ணிய படம்
லப்பர் பந்து படத்தின் வெற்றிக்கு பின்னர் கார்த்திக் சுப்புராஜ் - சூர்யா கூட்டணியில் உருவான ரெட்ரோ படத்தில் நடித்திருந்தார் சுவாசிகா. தற்போது தெலுங்கில் இருந்து அவருக்கு அதிகளவில் வாய்ப்புகள் வருகிறதாம். தொடர்ச்சியாக அம்மா வேடங்கள் வருவதாகவும், ராம் சரணின் அம்மாவாக நடிக்க அழைப்பு வந்ததாகவும் சுவாசிகா கூறியுள்ளார்.
ராம் சரணுக்கு அம்மாவாக நடிக்க மறுப்பு
"தொடர்ந்து அம்மா வேடங்கள் வருகின்றன. ராம் சரணின் அம்மாவாக நடிக்க அழைப்பு வந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. பெத்தி என்ற பெரிய படத்தில் அந்தக் கதாபாத்திரத்துக்கு என்னை அழைத்தார்கள். ஆனால் நான் மறுத்துவிட்டேன். அந்தக் கதாபாத்திரத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. இப்போது ராம் சரணின் அம்மாவாக நடிக்க எனக்கு விருப்பமில்லை. பிறகு நடிக்கத் தோன்றினால் நடிக்கலாம். இப்போதைக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்." என்று சுவாசிகா கூறினார். தேசிய விருது பெற்ற புச்சி பாபு சனா இயக்கும் பெத்தி படத்தில் நடிக்கவே சுவாசிகாவுக்கு வாய்ப்பு வந்தது.
சுவாசிகாவின் அடுத்த படம்
இதற்கிடையில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் சூர்யா படமான 'கருப்பு' தான் சுவாசிகாவின் அடுத்த பெரிய படம். சமீபத்தில் திருமணம் ஆன பிறகு, தனக்குச் குங்குமம் இடுவது பிடிக்கும் என்றும், அதைப் பற்றிய கிண்டல்கள் தன்னைப் பாதிக்காது என்றும், குங்குமம், தாலி போன்றவை தனது சொந்த விருப்பம் என்றும் சுவாசிகா கூறியிருந்தார். சுவாசிகாவின் கணவர் பிரேம் ஜேக்கப் சின்னத்திரை சீரியல்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இருவரும் சீரியலில் ஒன்றாக நடித்தபோது தான் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. திருமணத்துக்கு பின்னர் இருவருமே நடிப்பில் பிசியாகி இருக்கிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

