நீந்தி விளையாட இது நேரமல்ல! சந்தடி சாக்கில் சக நடிகைகளை வெளுத்து விட்ட ஸ்ருதி ஹாசன்! ஏன் தெரியுமா?
கொரோனா இரண்டாவது அலை மீண்டும் தலை தூக்கியுள்ள நிலையில், இந்தியாவில் ஒரு நாளைக்கு மட்டும் ஆயிரக்கனமான மக்கள் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த நிலையில், மக்கள் வேதனையை கவனத்தில் கொள்ளாமல், நீச்சல் குளத்தில் விளையாடியபடி தினுசு தினுசாக போஸ் கொடுத்து வரும், நடிகைகளை வெளுத்து வாங்கியுள்ளார் ஸ்ருதி ஹாசன்.
கொரோனா தொற்று, கொத்துக்கொத்தாக பரவி வரும் நிலையில், இதனை கட்டு படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா பரவல் அதிகமாகி வருவதால் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் ஒரு வார முழு ஊரடங்கை அறிவித்துள்ளன.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ சேவைகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்துக் காப்பாற்றிடும் வகையில், ஆக்ஸிஜன் உற்பத்தியையும் அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மக்கள் அனைவரும், கொரோனா தொற்று பரவல் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், சில நடிகைகள்... மாலத்தீவுக்கு சென்று... நீச்சல் குளத்தில் குளித்தபடி புகைப்படம் வெளியிட்டு, அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இதற்க்கு நெட்டிசன்கள் பலர் மக்கள் துயரத்தில் இருக்கும் நேரத்தில் இது தேவையா? என்பது போல் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, சந்தடி சாக்கில் சக நடிகைகளை வெளுத்தி வாங்கியுள்ளார்.
இந்த பேட்டியில், மக்கள் அனைவரும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நேரம் இது. மாஸ்க் இல்லாமல் நீச்சல் குளத்தில் விளையாடும் நேரமல்ல, நீங்கள் சவுகரியமாக இருந்தால் அதை உங்களுடனே வைத்துக்கொள்ளலாம். அதை மக்கள் முன் வெளிப்படுத்த தேவையில்லை. காரணம் அவர்கள் கஷ்டத்தில் உள்ளார்கள்" என்று கூறியுள்ளார்.
ஸ்ருதிஹாசன் இப்படி பேசியுள்ளதற்கு நெட்டிசன்கள் பலர் தங்களுடைய ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள்.
சமீப காலமாக, பாலிவுட் நடிகைகள் முதல் கோலிவுட் நடிகைகள் வரை... மலதீவுக்கு சென்று வெளியிட்டு வரும் புகைப்படங்களை சுட்டி காட்டி தான், ஸ்ருதிஹாசன் இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்று, பலரும் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.