ஹோட்டலில் தங்கிய போது இந்த பொருட்களை திருடிய ராஷ்மிக்கா!
பிரபல நடிகை ராஷ்மிக்கா தான் ஓட்டலில் தங்கியிருந்தபோது, ஒரு பொருளை திருடியதாக வீடியோ ஒன்றில்கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் ராஷ்மிகா பிரபல ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். அவர் தங்கியிருந்த ஓட்டலில், படுக்கைகாக போடப்பட்டிருந்த தலையணை உறைகள் மிகவும் அழகாக இருந்துள்ளது.
இதை பார்த்ததுமே, நடிகை ராஷ்மிக்காவுக்கு பிடித்து விட்டது. எனவே அவர், அதை திருடி விட்டதாக நகைச்சுவையுடன் வீடியோ ஒன்றில் குறிப்பிட்டு கூறியுள்ளார்.
மேலும் ஷூட்டிங்கின் போதும், பர்சனல் பிரச்சனைகள் காரணமாகவும் மன அழுத்தம் ஏற்பட்டால் தான் என்ன செய்வேன் என்று கூறி, ரசிகர்களையும் இப்படி செய்து பாருங்கள் நிச்சயம் மனஅழுத்தம் குறையும் என கூறியுள்ளார்.
மேலும் இசையை ரசித்து கேட்டுக் கொண்டே நடனம் ஆடுவதாலும் தன்னுடைய மன அழுத்தம் வெகுவாக குறைவதாக அவர் தெரிவித்துள்ளார். அதே போல் தனக்கு மிகவும் பிடித்த ice cream அதிக அளவில் சாப்பிடுவதாலும் அவருக்கு மன அழுத்தம் குறைவதாக தெரிவித்துள்ளார்.
ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் இருந்தால் ராஷ்மிகாவின் இந்த ஐடியாவை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.