நடிகை ராய் லட்சுமி வீட்டில் நடந்த திடீர் மரணம்..! கண்ணீரோடு கதறும் குடும்பத்தினர்..!
பிரபல நடிகை ராய் லட்சுமி வீட்டில் நடத்த மரணம் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கண்ணீரோடு பதிவிட்டுள்ளார்.
தளபதி விஜய்யின் சகோதரர், விக்ராந்த் ஹீரோவாக அறிமுகமான, 'கற்க கசடற' படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் ராய் லட்சுமி.
பின்னர் தமிழ் திரையுலகை தாண்டி பாலிவுட் திரையுலகிலும் கால் பதித்துவிட்டார். இவர் நடிப்பில் இந்தியில் கடந்த ஆண்டு வெளியான, ’ஜுலி’ திரைப்படம் சரியாக ஓடாததால், இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் சரிவர அமையவில்லை.
எனவே தற்போது, வெப் சீரிஸ் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இவரின் கை வசம் தற்போது தமிழில் 2 படங்கள் உட்பட,சில படங்கள் இவர் கைவசம் படங்கள் உள்ளது.
சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ராய் லட்சுமி, தற்போது கண்ணீரோடு பதிவிட்டுள்ள தகவலுக்கு பலரும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகை லட்சுமிராயின் தந்தை ராம்ராய் காலமாகி விட்டதாகவும், தன் தந்தையின் இழப்பு குறித்து ராய் லட்சுமி உருகியுள்ளார்.
எனது தந்தையின் இழப்பை ஒருபோதும் என்னால் ஈடுசெய்ய முடியாது. ஆனாலும் இந்த இழப்புடன் வாழ நான் கற்றுக்கொள்வேன். உங்களை போல யாரும் என்னை நேசிக்க முடியாது. என் இதயம் உண்மையில் வேதனையில் உள்ளது. உங்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை, மன்னிக்கவும்.
எல்லாம் சரியாகிவிடும் என்று என்னிடம் அடிக்கடி சொல்லியிருக்கின்றீர்கள். அதை இந்த விஷயத்திலும் எடுத்து கொள்கிறேன். உங்களால் நான் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட மகள் ஆனேன். நான் சுதந்திரமாகவும் வலுவாகவும் இருக்க விரும்பினேன். அது உங்களால் தான். உங்கள் இழப்பை ஈடுகட்ட எனக்கு வலிமை தேவை என்று உங்களுக்குத் தெரியும்.
நீங்கள் மேலே இருந்து ஆசீர்வாதங்களையும் தருவீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் என்னை முழுமையாக நம்புனீர்கள். உங்களுடைய விருப்பங்களை நான் நிறைவேற்றுவேன். ஒரு பொன்னான இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டது.
என் வாழ்க்கையின் மிக இருண்ட தருணம் இது. கடினமாக உழைக்கும் உங்களை கடவுள் விரும்பி எடுத்து கொண்டார். எப்போதும் எங்களை சுற்றி நீங்கள் இருப்பீர்கள் என்பதை உணர்கிறோம். எங்கள் இதயத்தால் எப்போதும் நீங்கள் நேசிக்கப்படுவீர்கள்’ என்று உருக்கமாக லட்சுமிராய் பதிவு செய்துள்ளார்.