கொரோனா தொற்று பரபரப்பு..! நடிகை ராதிகா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
நடிகை ராதிகா கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி கொண்ட பிறகும், தொற்றால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து நடிகை ராதிகா விளக்கம் கொடுத்துள்ளார்.
நடிகை ராதிகா, கணவர் சரத்குமாரின் மக்கள் நீதி மையம் கட்சியுடன் கூட்டணி அமைத்து 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்தித்தனர். தேர்தலுக்காக, தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று தீவிர பிரச்சாரம் செய்து வந்த ராதிகா தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தகவல் வெளியானது.
இந்தியாவில் 45 வயதிற்கு மேல் உள்ளவர்கள் அனைவருக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், ராதிகாவும்... மார்ச் மாதம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசையை போட்டுக் கொண்டார்.
இதுகுறித்த புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் செக் மோசடி வழக்கில் ராதிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ராதிகா தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என அறிவித்ததாக கூறப்பட்டது.
சரத்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் கொடுத்தாலும், 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறியுள்ளதால் சரத்குமார் மீதான ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது.
மேலும் ராதிகா ஆஜராகாததால் அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், நீதி மன்றத்தில் ஆராஜாகததற்கு காரணம் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இந்த தகவலுக்கு நடிகை ராதிகா ட்விட்டர் மூலம் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது... 'அனைவரது அன்பிற்கும் மிகவும் நின்றி, தனக்கு கொரனோ பாதிப்பு இல்லை. கொரோனா நோய் பாதிப்பு இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்திகள் உண்மை இல்லை. மேலும் சமீபத்தில் தான் இரண்டாவது தடுப்பூசி டோஸ் எடுத்துக் கொண்டதில் தனக்கு உடம்பு வலி மட்டும் தான் இருக்கிறது. சட்ட ரீதியாக பிரச்சனைகளை எதிர்கொள்வேன். உடல்நலம் சரியாகி விட்டதால் பணியை தொடங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.