கல்யாணம் ஆனாலும் குழந்தை தனம் மாறாத நஸ்ரியா...! அவர் செய்யுற அட்டகாசத்தை நீங்களே பாருங்க...!
நடிகை நஸ்ரியா தன்னுடைய நண்பர்களுடனும் வீட்டிலும் செல்ல சேட்டை செய்யும் புகைப்படங்களின் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
மலையாளம் மற்றும் தமிழில் உருவான 'நேரம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், குழந்தை நட்சத்திரமான நஸ்ரியா.
இந்த படத்தை தொடர்ந்து, 'ராஜா ராணி', 'நையாண்டி', 'வாயை மூடி பேசவும்' போன்ற பல தமிழ் படங்களில் நடித்தார்.
தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நஸ்ரியா தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருக்கும்போதே, பிரபல மலையாள நடிகர் ஃபகத் பாசிலை காதலித்து கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப்பின் திரையுலகை விட்டு சற்று ஒதுங்கியே இருந்த இவர் 2018ஆம் ஆண்டு கூடே என்கிற மலையாள படத்தில் கம் பேக் கொடுத்தார்.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது கணவர் மற்றும், நண்பர்களுடன் எடுத்து கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
இப்படி வெளியிடும் புகைப்படங்களில், இவரின் கியூட் ரியாக்ஷன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
திருமணம் ஆகியும் குழந்தை தனம் மாறாமல் இருக்கும் இவருடைய செல்ல சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது.
போட்டோவுக்கு போஸ் கொடுக்க சொன்னால் இவங்க பண்ற அட்டகாசத்தை பாருங்க.
இவங்க என்ன செய்தாலும் செம்ம கியூட் தான்
ஏதும் செய்யாமல் இருந்தாலும் நஸ்ரியா பேரழகு தான்