கிணற்றில் தவறி விழுந்த நமீதா... காப்பாற்ற ஓடிய கிராம மக்கள்... பரபரப்பு போட்டோஸின் பின்னணி என்ன?
அப்போது கிணற்றின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த நமீதா அவருடைய கையில் இருந்த செல்போன் விழுந்ததால் அதை பிடிக்க கிணற்றிற்குள் தவறி விழுந்தார்.
நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் 2004 ஆண்டு அறிமுகமானவர் நடிகை நமீதா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்த இவர் பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர்.
கவர்ச்சிக்கு தடையின்றி நடித்து வந்த நமீதா இடையில் ஓவராக வெயிட் போட்டு குண்டானார். இதனால் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. சரிந்த தனது செல்வாக்கை தூக்கி நிறுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மச்சான் நமீதாவை மீண்டும் ரசிகர்கள் வைரலாக்க ஆரம்பித்தனர். ஆனால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு தன்னுடன் மியாவ் படத்தில் நடித்தவரும் அந்த படத்தின் தயாரிப்பாளருமான வீராவை திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின்னர் கடும் உடற்பயிற்சிகளை செய்து மீண்டும் பழைய லுக்கிற்கு மாறிய நமீதா சோசியல் மீடியாவில் தன்னுடைய போட்டோக்களை பகிர்ந்து வந்தார்.
ஆனால் அவருக்கு அதன் பிறகும் படவாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. எனவே அதிரடியாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நமீதா பெளவ் வெளவ் என்ற படத்தை தயாரிப்பதோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.
ஆர்.எல்.ரவி, மேத்யூ ஸ்கேரியா ஆகியோர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம் அருகே உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வந்தது. அப்போது படப்பிடிப்பை பார்க்க அருகில் உள்ள கிராம மக்கள் திரண்டு நின்றனர்.
அப்போது கிணற்றின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த நமீதா அவருடைய கையில் இருந்த செல்போன் விழுந்ததால் அதை பிடிக்க கிணற்றிற்குள் தவறி விழுந்தார். இதை பார்த்த மக்கள் நமீதாவை காப்பாற்ற பாய்ந்தனர்.
ஆனால் அவர்களை தடுத்து நிறுத்திய படக்குழுவினரோ இங்கு ஷூட்டிங் நடப்பதையும், நமீதா நடித்ததாகவும் கூறி சமாதானம் செய்தனர். இருந்தாலும் ஊர் முழுக்க அதற்குள் நமீதா கிணற்றில் தவறி விழுந்து விட்டதாக செய்தி பரவிவிட்டதாம்.