கணவன், மகளை இழந்த சோகத்தில் தவிக்கும் டிஸ்கோ சாந்தி...நடிகையின் கண்ணீர் பக்கங்கள்!
நாடன மங்கை டிகோ சாந்தியின் சோக வாழ்க்கை பக்கங்கள் குறித்த தகவல் சமூக வலைதளப்பக்கத்தில் வைரலாகி வருகிறது.
actress disco shanti
70ஸ் இளசுகளை கவர்ந்திழுத்த கவர்ச்சி கன்னி சில்க்கிற்கு நிகராக ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர் டிஸ்கோ சாந்தி. இவரின் நடனம் 80களில் மிகவும் பிரபலம். இவர் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்கள் மற்றும், நடன மங்கையாக திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களிலும் பாலிவுட்டிலும் நடித்துள்ளார்.
actress disco shanti
வெள்ளை மனசு படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான இவர் ஊமை விழிகள் திரைப்படத்தில் நடனமாடிய இராத்திரி நேரத்து பூஜையில் என்ற பாடல் பிரபலம் ஆனதால், அதன் பின் நிறைய படங்களுக்கு ஒரு பாடலில் ஆடும் வாய்ப்பினைப் பெற்றார். இறுதியாக 1996-ம் ஆண்டு துறைமுகம் என்னும் படத்தில் தோன்றியிருந்தார் டிஸ்கோ சாந்தி.
actress disco shanti
இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். இவரது கணவர் கடந்த 2013-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவரது மரணத்திற்கு தவறாக கொடுத்த சிகிச்சை தான் காரணம் என டிஸ்கோ சாந்தி கூறியிருந்தார். அதோடு மருத்துவர்கள் அவருக்கு போட்டோ ஊசியினால் மூக்கு வாயெல்லாம் ரத்த வாந்தி எடுத்து அநியாயமாக என் கணவர் உயிரிழந்தார். இதுகுறித்து விசாரித்த போது தவறுதலாக நடந்து விட்டது எங்களை மன்னித்துவிடுங்கள் அதற்கு தேவையான பணம் தருகிறோம் என்று மருத்துவர்கள் சொன்னாதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.
actress disco shanti
1996 -ம் ஆண்டு ஸ்ரீஹரி என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு திரை திரைத்துறையிலிருந்து விலகிய டிஸ்கோ சாந்தி தனதுகணவர் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில்,ஒருநாள் கோயிலில் சாமி கும்பிட்டு கொண்டிருக்கும் போது எனக்கு தெரியாமலே அவர் என் கழுத்தில் தாலி கட்டினார். நான் கல்யாணம் ஆனால் உண்டியலில் தாலியை போடுவதாக வேண்டி இருந்தேன். அதனால் அவர் கட்டிய தாலியை உண்டியலில் போட்டுவிட்டு பிறகு என்னுடன் கூட பிறந்தவர்களுக்கு திருமணம் ஆனவுடன் வீட்டில் பெரியோர்கள் சம்மதத்துடன் எங்களுடைய திருமணம் நடந்தது என கூறியிருந்தார்.
actress disco
தற்போது இரு மகன்களுடன் இருக்கும் இவரின் மகள் 4 மாத கைக்குழந்தையாக இருந்த போதே இறந்து விட்டார். குழந்தையின் பெயரில் தன் கணவர் அறக்கட்டளை நடத்தி வந்தததாகவும், தற்போது தன்னுடைய மகன்கள் உதவியுடன் அந்த அறக்கட்டளையை தான் நடத்தி டிஸ்கோ சாந்தி கூறியுள்ளர். இவரது கணவர் ஸ்ரீஹரி தமிழ்,தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வில்லனாகவும், குணசித்திர வேடத்திலும் நடித்துள்ளார். இவர் விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தில் போலீஸாக நடித்து மாஸ் காட்டி இருந்தார்.