‘இது எல்லாமே வதந்தி...யாரும் நம்பாதீங்க’... ரசிகர்களிடம் மன்றாடிய பிரபல நடிகை... என்ன நடந்தது தெரியுமா?
வக்கீல் சாப் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் அஞ்சலி பற்றி தீயாய் பரவிய வதந்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அஞ்சலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தீயாய் பேசப்பட்டது.
தெலுங்கு படங்களிலும், சில விளம்பரங்களிலும் தலை காட்டி வந்த அஞ்சலி. ராம் எடுத்த "கற்றது தமிழ்" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் ஆனந்தி என்ற வேடத்தில் சிறப்பாக நடித்ததற்காக அஞ்சலிக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருது கிடைத்தது.
அதற்கடுத்து "அங்காடி தெரு", "எங்கேயும் எப்போதும்", "இறைவி", "தம்பி வெட்டோத்தி சுந்தரம்", "கலகலப்பு", "சேட்டை", "வத்திக்குச்சி" உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அஞ்சலி, இடையில் கவர்ச்சியில் அதகளம் செய்யும் கதாபாத்திரங்களிலும் தாராளம் காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார்.
இடையில் நடிகர் ஜெய் உடனான காதல் வதந்திகளால் தமிழ் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட அஞ்சலி, தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். தற்போது தனது உடல் எடையை கணிசமாக குறைந்து ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள அஞ்சலி, சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார்.
கடைசியாக தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கிய பாவக்கதைகள் ஆந்தலாஜி படத்தில் பார்த்தது. அதில் கூட அவர் முதலில் லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக நினைத்து பதறிய ரசிகர்கள் பின்னர் தான் உண்மையை அறிந்து கொண்டு அமைதியாகினர்.
இந்தியில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் தல அஜித் நடித்திருந்தார். அந்த படத்தில் தெலுங்கு ரீமேக்கில் தற்போது பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்துள்ளார். அந்த படத்தில் ஷரத்தா ஸ்ரீநாத் நடித்த கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்துள்ளார்.
வக்கீல் சாப் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் அஞ்சலி பற்றி தீயாய் பரவிய வதந்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அஞ்சலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தீயாய் பேசப்பட்டது.
இதையறிந்து அதிர்ச்சியடைந்த அஞ்சலி, தனது சமூக வலைத்தள பக்கத்தில்,எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை. நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்றும் இணையத்தளங்களில் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக செய்திகள் வெளியானதை அறிந்தேன். அது முற்றியும் பொய்யான செய்தி என்று கூறியுள்ளார்.மேலும் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் யாரும் அதை நம்ப வேண்டாம்’ என்று பதிவு செய்திருக்கிறார்.