“விஜய் படத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன்”... “அஜித்திடம் நல்ல பாடம் கற்றேன்”... பிரபல நடிகை ஓபன் டாக்!
நடிகை அக்ஷரா கெளடா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தமிழ் சினிமாவின் முன்னனி நாயகர்களான அஜித், விஜய் குறித்து படு ஓபனாக அளித்துள்ள பதில்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது
பாடலாசிரியர் சினேகன் நடித்த உயர்திரு 420 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அக்ஷரா கெளடா.
பெங்களூருவைச் சேர்ந்த அக்ஷரா அதன் பின்னர் துப்பாக்கி, ஆரம்பம், இரும்பு திரை, போகன், சங்கிலி புங்கிலி கதவ தொற ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் அக்ஷரா கெளடா.சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் துப்பாக்கி படத்தில் நடித்தது குறித்து பகிர்ந்துள்ள கருத்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில், துப்பாக்கி படத்தில் நடித்தது எதிர்பாராதது. அப்போது நான் மும்பையில் இருந்தேன்.அதனால் அந்த படத்தில் நடித்தேன். ஆனால் அந்த படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன். ஏனென்றால் முதலில் என்னிடம் காஜல் அகர்வாலுக்கு தோழி என்று தான் சொன்னார்கள். ஆனால் படத்தில் அப்படி இல்லை. இருந்தாலும் அதற்காக நான் கோபப்படவில்லை. துப்பாக்கி படத்தில் எனக்கு நடந்த ஒரு நல்லவிஷயம் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய், சந்தோஷ் சிவன் ஆகியோரது அறிமுகம் கிடைத்தது தான் என தெரிவித்துள்ளார்.
அஜித், விஜய் இருவருக்குமிடையே இருக்கும் ஒற்றுமை என்ன என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அக்ஷரா, இருவருமே ஷூட்டிங் ஸ்பார்ட்டில் அதிகம் பேசமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
அதேபோல் நடிகர் அஜித்திற்கு சினிமாவை தாண்டி நிறைய விஷயங்கள் தெரியும். எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தார். அவரிடமிருந்து லவ் லைஃப் என்பதை கற்றுக்கொண்டேன். அஜித் யாரை முதலில் சந்தித்தாலும் அவர்களுடைய குடும்பத்தினரை பற்றியும் நலம் விசாரிப்பார் எனக்கூறியுள்ளார்.
மேலும் நடிகர் விஜய் ஷர்ட் இல்லாமல் பார்க்க செம்ம அழகாக இருப்பார் என்றும் படு ஓபனாக பதிலளித்துள்ளார்.
அக்ஷராவின் இந்த அதிரடி பதில்கள் வைரலாகி வருகிறது