நடிகை ஐஸ்வர்யா ராய்யின் முன்னாள் பெண் மேனேஜர் 14 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!
பிரபல நடிகர் வருண் ஷர்மா, சுஷாத், மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோரிடம் பணியாற்றியுள்ள இளம் பெண், மேனேஜர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை மலாட் பகுதியில் வசித்து வந்த, திஷா சாலியன் 14 வது மாடியில் உள்ள தன்னுடைய குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள விஷயம் தற்போது பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 7 ஆம் தேதி திஷா தற்கொலை செய்து கொள்வதற்காக வீட்டில் இருந்து திடீர் என குதித்தார் . அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதுவரை இவருடைய தற்கொலைக்கான காரணங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதுகுறித்து மும்பை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
இவர் கடைசியாக இன்ஸ்டாகிராமில் இது உன்னுடைய, உன்னுடைய தேர்வு என்பதை பதிவு செய்துள்ளார்.
திஷா, இதற்கு முன் நடிகர் வருண் ஷர்மா, நடிகர் சுஷாத், மற்றும் ஐஸ்வர்யா ராய் போன்ற முன்னணி பிரபலங்களிடம் மேனேஜராக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் இவருக்கு மிகவும் உருக்கமாக நடிகர் வருண் சர்மா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார்.
கொரோனா பிரச்சனையால், நிதி நெருக்கடி காரணமாக தொடர்ந்து சீரியல் பிரபலங்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், பண கஷ்டம் காரணமாகவே தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
எனினும் தொடர்ந்து இவருடைய தற்கொலைக்கான காரணத்தை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.