9 இயக்குநர்கள், 9 நடிகர்கள் பிரம்மாண்டமாக தயாராகும் “நவரசா”... யாருடன் யார் கூட்டு தெரியுமா?
தற்போதைய ஆன்லைன் யுகத்தில் வெப் சீரிஸ் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் இந்த லாக்டவுன் நேரத்தில் வீட்டில் இருந்த படியே ஆன்லைனில் படத்தை பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி பிரபல நடிகர் சூர்யா வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்து கசிந்துள்ள சூப்பர் தகவலால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் தற்போது வெப் சீரிஸ் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளனர். இந்தியில் மட்டுமே வெளியாகி வந்த வெப் தொடர்கள் தற்போது தமிழிலும் வெற்றிக்கொடி கட்ட ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் சூர்யாவும் வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி உள்ளது. இந்த தொடரை 9 நடிகர்களை வைத்து 9 இயக்குநர்கள் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.
சூர்யா, சித்தார்த், விஜய் சேதுபதி, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்க உள்ள இந்த வெப் சீரிஸை 9 பிரபல இயக்குநர்கள் இயக்க உள்ளனர்.
அதாவது கெளதம் மேனன், கார்த்திக் நரேன், கே.வி.ஆனந்த், பிஜாய் நம்பியார், அரவிந்த் சாமி, சித்தார்த், சுதா கொங்கரா, ஜெயந்திரா ஆகியோருடன் இணைந்து மணி ரத்னமும் ஒரு எபிசோட்டை இயக்க உள்ளாராம்.
அரவிந்த் சாமி இயக்க உள்ள தொடரில் சித்தார்த் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
‘180’ படத்தை இயக்கிய ஜெயந்திரா இயக்கத்தில் சூர்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்
‘இறுதிச்சுற்று’, ‘சூரரைப் போற்று’ புகழ் சுதா கொங்கரா இயக்க உள்ள எபிசோட்டில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க உள்ளாராம்.
தமிழில் விக்ரமை வைத்து ‘டேவிட்’, துல்கர் சல்மானை வைத்து ‘சோலோ’ படங்களை இயக்கிய பிஜாய் நம்பியார் விஜய் சேதுபதியை இயக்க உள்ளார்.
இதர இயக்குநர்களுக்கான நடிகரை தேர்வு செய்யும் பணியில் மணி ரத்னம் மற்றும் இயக்குநர்கள் ஈடுபட்டுள்ளார்களாம்.
இந்த தொடரை அமேசான் பிரைமில் வெளியிட்டு அதன் மூலம் கிடைக்கும் ஒரு தொகையை திரைப்பட தொழிலாளர்களுக்கு கொடுக்க மணி ரத்னம் முடிவெடுத்துள்ளாராம்.