வேஷ்டி சட்டையில்... கையில் வாள் பிடித்து வீரநடை போடும் சூர்யா..! வைரலாகும் வெறித்தனமான புகைப்படம்!
கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ள நடிகர் சூர்யா, தற்போது 'சூர்யா 40 ' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்நிலையில் சூர்யா கையில் வாள் பிடித்து வீரநடை போடும் போஸ்டர் ஒன்றை சன் பிட்சர்ஸ் நிறுவனம் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில், தன்னுடைய கதாபாத்திரத்திற்காக ரிஸ்க் எடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் சூர்யா. நடிப்பை தாண்டி தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். இவர் நடித்து தயாரித்திருந்த 'சூரரைப்போற்று' திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
மேலும் 'சூரரை போற்று' திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கும் அனுப்பப்பட்ட நிலையில், தரமான 100 படங்களின் பட்டியலில் இடம்பிடித்தது. இந்நிலையில் சூர்யா அடுத்தடுத்து 'வாடிவாசல்', பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள 40வது படத்தில் பிஸியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக கடந்த மாதம் 9 ஆம் தேதி கூறியிருந்தார். இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.
கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு உள்ள சூர்யா, சமீபத்தில் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் பள்ளி விழாவில் கலந்து கொண்டார்.
மேலும் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதியில் இருந்து சூர்யா தன்னுடைய 40 படமான பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
ஏற்கனவே இந்த படத்தில் துப்பாக்கியை கையில் வைத்திருப்பது போல் ஒரு போஸ்டர் வெளியாகி விரலான நிலையில், தற்போது கையில் வாள் பிடித்து வீரநடை போடுகிறார் சூர்யா.
சன் பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட சில மணி நேரத்தில் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களுடைய லைக்குகளை குவித்து வருகிறார்கள். ட்விட்டர் டாப் ட்ரெண்டிங்கிலும் இந்த புகைப்படம் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.